Saturday, January 30, 2010

விரல் விந்தைகள்...



தலைப்பை படிச்சுட்டு என்னடா இவன் சிம்பு ஆரம்பிக்குற புது கட்சிக்கு ஆள் சேக்குற வேலைல இறங்க்கிடானொன்னு  சந்தேக படுரவங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்க ஆசை படுறேன்...யாரு கட்சிக்கும் நான் ஆள் இல்லை என் கட்சில எந்த ஆளும் இல்ல...(என்ன மனசுல பஞ்ச் சொல்லறதா நெனப்பா??)இதெல்லாம் எதுக்கு நாம விஷயத்துக்கு போவோம்...வாங்க


எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த கல்யாண  மோதிரம் ஏன் மோதிர விரல்ல போடுறாங்கன்னு.சந்தேகத்தை தீர்க்க ஏன் ரூம்ல இருக்குற பெருசுங்க கிட்ட கேட்டேன் யாருக்கும் தெரியல ஒருத்தர் மட்டும் ரென்ப அறிவா சொன்னாரு ஏன்னா அது மோதிர விரல் அதுனால போடுறாங்கன்னு.நான் பொறுமையா இருந்துட்டேன்.(வேற என்ன பண்ண முடியும்...)
நம்ம ஆளுங்க காரணம் இல்லாம எதையும் பண்ண மாட்டங்கன்னு ஒரு பெரிய நம்பிக்கை.இத கண்டு பிடிக்காம விடகூடாதுன்னு தீவிரமா வலைல தேடுனேன்.கண்டுபிடுச்சு பார்த்தா அந்த காரணத்துல ஒரு லாஜிக்கே இல்ல.
அது என்னனா ....


மோதிர விரல்ல மட்டும்தான் ரெண்டு நரம்பு இருக்குதாம் அதுல ஒன்னு ஆம்பளை நரம்பாம்; இன்னொன்னு பொம்பளை நரம்பாம் அது ரெண்டும் சேர்ந்து இருக்குறதால அந்த விரல்ல கல்யாண மோத்திராம் போடுறாங்களாம்.இதுல லாஜிக் இடிக்குதேன்னு...மனசு கேக்கல இன்னும் தேடுனேன் ஒரு சூப்பர் மேட்டர் கண்ணுல மாட்டுச்சு.அத நீங்களும் கேளுங்க..இல்ல இல்ல நீங்களும் செஞ்சு பாருங்க...ரெடியா..


அதுக்கு முன்னாடி நம்ம விரல்களை பற்றி ஒரு விரிவுரை....
நம்ம கைல இருக்குற கட்டை விரல்தான் அம்மா,அப்பா விரல்,அடுத்த ஆள்காட்டி விரல்தான் நம்ம சகோதரன் ,சகோதரி விரல்,அடுத்த விரல் உங்களோட விரல்,(டேய் இது எல்லாமே என்னோட விரல்தாண்டா...அப்டின்னு கூட்டத்துல யாரோ கேக்குறாங்க ம்ம்ம்ம்...சொல்லறத மட்டும் கேக்கணும் நோ மொக்கை  கொஸ்டின் )அடுத்த மோதிர விரல் கணவன்,மனைவி விரல் (கவனமா கேக்கணும்...)அடுத்த சுண்டு விரல் குழந்தைகள் விரல்... புரிஞ்சுச்சா...புரியன ஒன்னும் பண்ண முடியாது...ஓகே ரெடி...


1...உங்க ரெண்டு கையும் வணக்கம் சொல்லற மாதிரி வச்சுகோங்க...(அதுக்கு முன்னாடி உங்களை யாராவது பாக்குராங்கலானு செக் பண்ணிகொங்க பாத்தா தப்பா நெனசுபாங்க...)
2...இப்போ எல்லா  விரல்களும் சரியா ஜோடி செந்துருச்சா...??
3...இப்போ உங்க விரல் இருக்குல...(நாடு விரல் )ஜோடியா பூமிய பாக்குற மாதிரி  உள்ள  மடிச்சு வச்சுகோங்க...
4...இப்போ எல்லா விரல்களும் ஜோடியா ஒட்டி இருக்கு ஓகே வா...
5...இப்போ அம்மா.அப்பா வா பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
6...சகோதரன் ,சகோதரிய பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
7...குழந்தைகளா பிரிச்சு பாருங்க...பிரிஞ்சுருச்சு...
8...இப்போ கணவன் மனைவிய பிரிச்சு பாருங்க...பிருஞ்சுச்சா ??முயற்சி பண்ணி பாருங்க...முடியலையா...முடியாது ரெண்டு கையும்  தனியா பிரிக்காம கணவன் மனைவிய பிரிக்க முடியாது...
கணவன் மனைவி பிரியாம இருக்கணும்...அதுனாலதான் கல்யாண மோதிரம் அந்த விரலில் போடுறாங்களாம்...இது சீனர்களுடைய நம்பிக்கையாம்...லாஜிக் நல்லா இருக்குல...

Thursday, January 28, 2010

ஒருநாள் ஒரு கவிதை...

முதலில் என் முந்தைய பதிவான மொட்டை மரம், குட்டி கனவுலகம் கவிதைகளுக்கு நண்பர்கள் அனைவரின்   ஊக்கத்திற்கும்  ஆதரவிற்கும் நன்றிகள்...மொட்டை மரத்திற்கு ஒரு சகோதரியின்   பின்னுட்டம் கவிதையின் ஆழம் சொல்லியது அவர்களின் கருத்துக்கும் நன்றி ...சரி பதிவுக்குள்ளே போவோம்...

தலைப்பை பார்த்தவுடனே தினமும் ஒரு கவிதை எழுதிருவானொன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது...அதெல்லாம் ஒன்னும் இல்ல இது ஒரு வலை பக்கம்.எனக்கு தெரிந்ததை உங்களோடு பகிர்வதற்கான ஒரு முயற்சி அவ்ளோதான்...



காலையில் எழுந்ததும் சூடாகத் தேநீர் குடிப்பதைப் போல
சில விஷயங்கள் மனதிற்கு மிக இதமானவை, இனிமையானவை! 
கவிதைப் படிப்பதும் அது போலதான்! 

இணைய ஊடகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேநீர் அளிப்பது கடினம் :) 
அதனால் தினமும் காலையில் சுடச்சுட கவிதைப் பறிமாறி
உங்கள் நாளை இனிமையாக்க இதுவொரு முயற்சி...


இப்படிதான்  ஒரு அழகான வர்ணனையோடு ஆரம்பிக்குது  பக்கம்.ஒரு இதமான இனிமையான விஷயத்தை தினமுக் காலைல அனுபவிச்சா எப்படி இருக்கும் அந்த அனுபவத்தை குடுக்குது இந்த பக்கம்.நிறைய புது கவிதைகள் ,இலக்கண கவிதைகள்,நம் தமிழ் இலக்கிய நுல்களில் இருக்கும் கவிதை,நம்ம ஆசான்களின் கவிதை,அழகிய தமிழ் பட பாடல்கள். இப்படி தினமும் ஒரு சுவையோடு வருது கவிதைகள்...
இங்கு நுழையவோ படைப்புகளை அனுப்பவோ  (யூசெர் நேம் ,பாஸ் வோர்ட் )  எந்த தடையும்  இல்லை... 


தினமும் நிறைய பேர் வந்து போறாங்க,அதுவும் இல்லாம   நம்   கவிதையும் அனுப்பினா அதுவும் சில நாட்களில் ஒரு நாள் கவிதையா வெளியே வருது.அடியேனின் படைப்பும் வந்து இருக்கு.நம் நண்பர்களுக்கும் இதை தெரிவிக்கவே இந்த பதிவு.நண்பன் வசந்து  விகடனுக்கு என் கவிதைய அனுப்ப சொன்னாரு நானும் அனுப்பி  அனுப்பி அனுப்பிட்டே இருக்கேன் என் நேரமோ என்னவோ தெரியல  ஒன்னும் அவங்க கண்ணுல பட்டதா தெரியல அதுக்கு வேற எதாச்சும் வழி இருக்காணும் தெரியல...
கவிதை எழுத்தும் நண்பர்களும்... கவிதை பிடித்த நண்பர்களும் இங்க போய்தினமும்  ஒரு புத்துணர்வு பெற வாழ்த்துக்கள்...


Tuesday, January 26, 2010

விதவை விருட்ஷம்...



(மொட்டை மரம்... இந்த தலைப்பும் சரியாய் இருக்கும் என நினைக்கிறேன்.)

வெந்நீர் வார்த்து வளர்ந்த விருட்ஷம்; 
காதல் காற்றின் கைகள் தழுவாது 
தானாய் தற்கொலை செய்ய  
உடல் உலுக்கி உதிர்த்து விட்டது
உயிர் துளிகளை.

வெட்டை வெளி மொட்டை மரமாய்
வெறித்து கிடக்கு முகவரி தொலைத்து.
சூரிய கதிர்கள் தட்டி கொடுத்தும்
மழை மகளுக்கு மணம் வர மார்க்கமில்லை.

மத்தியான மஞ்சள் மாறி 
மாலை நேரம் மருகி நிற்கையில் 
மலைக்காடு கடந்த மைனா கூட்டம் 
இளைப்பாற இடம் தேடி 
இரவு தூக்கம் இறக்கி வைக்க மரம்
இறங்கி ஆளுகொரு இடம் பிடித்து கொண்டன.

மொட்டை மர  கிளைகளில் 
இப்பொதுஇலைகளுக்கு பதிலாய் 
மைனா குஞ்சுகள்  முளைத்து; 
வானவில்லின் வண்ணம் போர்த்தி  
புது வகை புணர்ந்து நிற்கிறது.

விசித்திரம் விறுவிறுவென  பரவி
விந்தயை வேடிக்கை பார்க்க
விரைந்து வருகிறாள் மழைமகள்
கார்கூந்தல் தலை விரிக்க.

கார்மேகம்  கண்ட கானமயிலாய்  
தொகை விரித்து தொலைவாய்
நிற்கிறது மொட்டை மரம்.

மயில் பார்த்து மதி மயங்கி
மழை துளிகளை துப்பத்   
தொடக்கி விட்டாள் மழை மகள்.
மழை சூட்டில் கண்விழித்து
மறைவிடம் தேடி மறைந்து போனது
மைனா குஞ்சுகள்.

வண்ணம் கொட்டி  வகை தோகையாய்
வரைந்த கோலம்; தண்ணீர் கொட்டி  துடைத்த
வெறும் தரையாய் மீண்டும் வெறித்து போனது.
மொட்டை மரம்
விதி போட்ட விதவை கோலமாய்....                                             




                               

Sunday, January 24, 2010

''குட்டி'' கனவுலகம்...


திரும்பிய திசைகளெல்லாம்
தேவதை  தோழிகள்;
அவளுக்கும் எனக்கும் மட்டும்
தெரிந்த தேவ பாஷை - இங்கு
அனைவருக்கும் சரளமாய்.
பறக்க வசதியாய் சிறகுகள்,
பந்தாட பிரபஞ்சம்,
பால் குடிக்க நிலா.

பறந்து வந்தாள் ஒரு
பருவ தேவதை;
மின்மினி பூச்சிகள்
மின்னி தெறித்தன
அவள் சிரிப்பில்.
''கனவுலகம் வரவேற்கிறது''
வரவேற்றாள்.

வண்ணத்து பூச்சிகளின்
சிறகுகள் திருடி வந்து
ஆளுகொரு பக்கமாய்
விசிறிவிடும் இரண்டு
பூக்களுக்கு நடுவே நான்.

இறக்கைகளை களைந்து இளைப்பாற
இசை தட்டுகளை சுழற்றி கொண்டு
இறங்குகிறாள் இனியவள் ஒருத்தி.

நேற்று நிலா காட்டி  ஊட்ட; 
இன்று பால்சோறு ஊட்ட 
பால்நிலவே பக்கத்தில்.
சிதறிய சோற்றில்
குட்டி குட்டி நிலவாய்
எட்டி எட்டி பார்த்து வீண்மீன்.

நீர் பருக  வாய்திறந்தால் 
தேன் பாய்ச்சி தினரடிக்கிறாள்
தெவிட்டாத தேனருவி.
விருந்து முடிந்தது.

 சிறகுகள்  பூட்டி விட்டு
சிரிக்கிறான் சிங்கார தேவன்; 
இடுப்பு துணி ஈரமாக
விடிய வருகிறது...

கண்விழித்தால்,
பருவதேவதை தவிர அனைவரும்
பகல் விடுப்பு வாங்கி
பறந்து போனார்கள்.

சிறகுகள் தேடி துலாவுகையில்
அது அவளின் விரல்களாய் மாறி இருந்தது.
தேவ பாஷையில் ஒரு முத்தமிட்டு
அணைத்து கொண்டாள் அன்னை அவள் .
                                                                                                                                                                                                   

Monday, January 18, 2010

ஏண்டி...???


காற்றில்  கைநழுவி
கடந்து போன குடையை - ஏன் 
குற்ற படுத்துகிறாய்?
குழலிட்டு தேன்
குடித்த கருவண்டு
மலரின்  மது உண்ட  
மயக்கத்தில்;
திக்கு முக்கு தெரியாமல்
திணறுவதுதானே நியாயம்...

உன் உதடு சுட்ட தேநீரை - ஏன்
உதறி தள்ளுகிறாய்?
மலரே வந்து செவ்விதழ்  குவித்து  
தேன் எடுக்க; முதலில் 
கோப்பைக்கு  முத்தம் தந்தால்!   
சுட்டு வைக்காமல்
சும்மாவா இருக்கும்...

சூரியன் சுள்ளென்று
சுட்டதும் ஏன் - முகம்
சுளிக்கிறாய்?பார் நீ
சுளித்த சுளியலில் இன்னும் கொஞ்சம் 
சூடாகி எங்களைத்தான் சுட்டுஎடுக்கிறான்... 

காய்கிற நிலவை - ஏன்
கரைய விடுகிறாய்?
உலகே நிலவொளி குடித்திருக்க;
நீ மட்டும் பால் குடித்து
பால் நனைத்த  உதடோடு
படுக்க போனால்...

சும்மா  இருக்கும்  தென்றலை - ஏன்  
சூறாவளி  ஆக்கிவிடுகிறாய்?
கார்குழல் கலைத்த தென்றலை
கையமர்த்தி விட்டு காதலன்
விரல்கள் விளையாட கொடுத்தால்...

அடிக்கடி கழண்டு விழுவதாய்  
கால் கொலுசை - ஏன்
கடிந்து கொள்கிறாய்?
கொஞ்சி கொஞ்சி பேசும்
கொலுசொலியை
சின்ன சின்ன சிணுங்களில்
சிரிக்கின்ற சாக்கில் சிதறடித்தால்...

''போடா திருடா''...ஏன் திட்டுகிறாய்?
போதி  மர புத்தனாய்
பொறுமையாய் இருந்த உயிரை
புலம் பெயர்த்து  விட்டு
தொடதே  என்றால்...                                                                           

Wednesday, January 13, 2010

கள்ளி (பெண்) பால்...


அல்லி  மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உதைத்து
வெளிவர விண்ணப்பம் போடுகிறாள்.

வேண்டாமடி என் செல்லமே இருட்டி விட்டது
விடியும் வரை பொறுத்திரு...
நீ பிறந்தாவது விடியட்டும் நம் விதி.
உடனே வருவதென்றால்
உன் இருட்டு விடியல்  
உன்னை இடிய  விடுமடி.
அச்சம் என்னை ஓடிய விடுமடி.
அன்னையின் அருள் கேட்டு
பொறுத்தாள்  பொன்னியின் செல்வி.

சேவல் கூவும் முன்னே 
அன்னையின் அடி வயிற்றில் 
அலாரம் அடித்து வரப்போவதை 
உயிர் மொழியாய் வழிமொழிந்தாள்.
முட்டையை முட்டும்
பெட்டை  கோழியாய்
முட்டி மோதி பார்த்து விட்டு 
முக்களோடு முனங்களையும் சொல்லி தந்தாள்  
முல்லை இவள்.
பத்து நிமிட  பாடுக்கு பின்  பனிக்குடம் உடைத்த  
பால்குடமாய் பவனி  வந்தாள்.

தலைகிழாய் தரையிறங்கி 
தாரணி பார்க்க தயங்கிய   தங்கம் இவள்;
கண்னடைத்த  கண்ணகியாய்  
கண்திறக்க காலம் பார்த்து கிடந்தாள்.

சீம்பால்   சுரந்திருக்க  பச்சை
காம்பால் கறந்து வந்த கள்ளிப்பால் காத்திருக்கு;
கருத்த கிழவி ஒன்று காரியம் பார்த்திருக்கு.
காத்திருந்தது போதும் கண்விழி கண்மணியே
கதறி அழு பொன்மணியே
காது இருந்தால் அந்த
கடவுளாவது கேக்கட்டும்  உன் கதறலை.

கணநேரம் கழித்து கன்னியவள்
கதறுகையில் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ
கார்முகிலன் காது முட்டி கரைத்தது கார்முகிலை
கண்ணிர் கதறி மழையாய் உதறி விட்டான்
அந்த மந்தார பூமியிலே.  

காஞ்சு  போன கழனி எல்லாம்
கை விரித்து கவர்ந்து கொண்டது
கண மழையை.

மங்கை இவள் மனுஷி இல்லை
மகமாயி மறு உருவம் என்று
மக்களெல்லாம் மண்டி இட.
அருள் வாக்கு சொல்லும்
அம்மனின் அவதாரமாய்...
இதற்க்கு கள்ளிப்பாலே
குடித்திருக்கலாம் என் உயிரை.
அடிமனதில் அடித்து கொண்டு
வேப்பில்லை யால் வெளுத்து   
வாங்கினாள்  வேறொருவனை.                                                                          

Friday, January 8, 2010

ராத்திரி ரவுசு...ச்சீ... போடா....


 அடல்ஸ் ஒன்லி... இல்லை.
அதி காலை கண்ணடைத்து கிடக்க சரியாய் ஆறு மணிக்கு உம்மாஹ்...''நேரமாச்சுடா'' கண்விழித்து அலறினாள் ஒருத்தி, இன்னும் இருக்கமாய் கட்டிகொள்ள சொன்னால் இன்னொருத்தி, ப்ளீஸ்... என்னை விளக்கி விடாதே என்றால் மற்றவள்.இன்னும் முத்தம் தந்து தீரவில்லை இன்னொருத்திக்கு.அலறியவளை பத்து நிமிடம் கழித்து மீண்டும் அலற உத்தரவிட்டு ஒரு குட்டி கூடல்.யார் இவர்கள்?? எப்படி என் வாழ்வில் நுழைந்தார்கள்???.கொஞ்சம் ரகசியமாய் கேளுங்கள்...


நிஜமாவே அழகான  அழகிகள் என் படுக்கை அறையை  அலங்கரிக்க காத்திருந்தனர்.ஒருத்திக்கு தொட்டு அணைத்தால்  பிடிக்கும்;   ஒருத்திக்கு கட்டி அணைத்தால் தான் பிடிக்கும்; ஒருத்திக்கு இரவெல்லாம் முத்தமிட மட்டும் ஆசை; ஒருத்திக்கு இரவு முழுதும் என் மீது சாய்ந்து கொள்ள ஆசை;ஒருத்திக்கு பகலும், இரவு தன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை. ஐந்து பேரை சமாளிப்பது சாதாரன காரியமா??ஹும்ம்ம்ம்..... உங்களுக்கு மட்டு  இவள்களின்  ராத்திரி ரவுசுகளை சொல்கிறேன் யாரிடமும் சொல்ல வேண்டாம்.ப்ளீஸ்.... 


முதலாவது சொல் பேச்சு கேட்பவள் தொட்டு அணைத்தால்  போதும் துவண்டு விடுவாள்.பகலில் அவளுக்கு வேலை இல்லை.இரவு உறங்குவதற்கு முன் வரை கண்விழித்து காத்திருப்பாள் என் அந்த ஒரு ஸ்பரிசத்திற்காக. சில நேரம் கண்ணடித்து கவனிக்க சொல்வாள்.அனைவரையும் மேற்பார்வை செய்பவளும் அவளே.


அடுத்தவள் இரவு முழுதும் அணைத்து கிடக்க ஆசை படுபவள்.அவள் ஆசை படுகிறாளோ இல்லையோ எனக்கு அவள் என்றால் ரெம்ப ஆசை.தூக்கத்தில் கூட அவளை தொட்டு கொண்டேதான் இருப்பேன் .இவள் மட்டும் தான் தினமும் அதிகம் என்னிடம் சிக்கி தவிப்பவள்.கொள்ளை அழகி.கட்டி கொள்வதற்காகவே தட்டி கொண்டு வந்தவள்.


அடுத்தவள் முத்த பிசாசு. ஒரு ரகசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்.இவள் தட்டி கொண்டு வந்தவளின் தங்கச்சி.சொன்னால் நம்ப மாட்டீர்கள் இருவருக்கும் என் மேல் கண்டதும் காதல் .அந்த வீட்டு பெரியவர் கேட்டார் யாரை பிடித்திருக்கு என்று.நான் இரண்டுமே என்றதும்,இரண்டையுமே என் தலையில் கட்டி வைத்து விட்டார்.பாவம் அவருக்கு மற்றவர்களை பற்றி தெரியாது.இவள் வந்த முதல்  நாள் கொஞ்சம் விலகி விலகி போனால்.பின் வேறு வழி இல்லை வழிக்கு வந்து விட்டாள்.சத்தம் இல்லாமல் முத்தமிட்டு என்னை முனங்க வைப்பவள்.சில நேரங்களில் ஆக்களும் தங்கச்சியும் அவர்கள் வேலையை பகிர்ந்து கொள்வதுண்டு. வேறு எவளுடனும் கூட்டு வைத்து கொள்ள மாட்டார்கள். சொல்வதற்கு கொஞ்சம்
 கூச்சமா இருக்கு இருவரும் நான் ஆடை மாற்றி விட்டால்தான் பிடிக்கும்.ச்சீ... இரெட்டை பிசாசுகள்.


அடுத்தவள் ஊரில்  இருக்கும்போதே எனக்கு நல்ல பழக்கமானவள். ஊரில்
 இருந்து புறப்படும் முன் அம்மா எனக்காக தேடி பிடித்த பெண். அம்மாக்கு ரெம்ம பிடித்து போனதால் வேறு வழி இல்லாமல் கையோடு அழைத்து வந்தேன்.அனால் இவள் சமத்து நம்ம ஊர்க்காரி என்றாலும்  மற்றவர்களோடு சீக்கிரமே ஒத்து போய் விட்டால்.  என்மேல் கிடக்கும்போது ஒருவித சுகமான கதகதப்பு தருபவள் இவள் மட்டும் தான்.ஐ லவ் யு டி...


அடுத்தவள் தான் இம்சைக்காரி. இவளுக்கு நேரம் காலமே கிடையாது.நினைத்த போதெல்லாம் இவளோடு கொஞ்சி கொண்டே இருக்க வேண்டும்.இரவில் இவள் இம்சை அப்பா சொல்லி மாளாது.ஆனால் நிறைய படித்தவள்.சொன்ன நேரத்திற்கு எழுப்பி விடுவாள்.இவள் இருந்தாலும் இம்சை,இல்லாவிட்டாலும் இம்சைதான்.இவள்
 ஒருத்தி மட்டும் தான் என்னோடு அதிகம் இருப்பவள்.காதில் காதல் பேசியே  கொள்வாள். 


 இவள்களில்  ஒருத்தி இல்லை என்றால் கூட என் இரவே என்னவோ போல் ஆகிவிடும்.அலுவலகத்தில் கூட சிலநேரம் இவள்களின் நினைவில் மயங்கி போவதுண்டு.நான் எப்போது வருவேன் என அவள்களும் ஏங்கித்தான் போவார்கள்...
 சரியாய் பத்து நிமிடத்தில்  எழுப்பினாள் .எழுந்து ஒருத்தியை மடித்து விட்டு.மற்றவள் உறங்கி இருந்தால்.அக்கா தங்கையை  அடுக்கி விட்டு.ஒருத்தியை கையோடு கொண்டு போனேன்.


 இன்னும் கொஞ்சம் கதை கேளுங்க...                                                         

                                

Wednesday, January 6, 2010

புள்ளி இல்லாத புலம்பல்கள்...



புள்ளிகள் மட்டும் பொறுக்கி எடுத்த   
புத்தகம்; விரித்து - விழி
பிதுங்கி பார்கிறேன்.

சில - பால வார்த்தைகள்   
உயிர் (துளி) இல்லாத காரணத்தால்
அர்த்தமற்று போய் ஒவ்வொன்றும்
அனாதையாய் அலைகிறது.
புள்ளி இல்லாத வார்த்தைகள்  
என்னதான் சொல்ல காத்திருக்கு????

பூ-விடம் போய்...
உயிர் புள்ளி இல்லாத
ஒற்றை எழுத்து நீ...
என்ன தான் பெரிதாய் சாதித்து  விட்டாய்
வினாவினேன்.
பூ கேட்டது என்னை
பார்த்து உனக்கு என்ன தோன்றுகிறது??
நீ... அழகு என்றேன்...-அட
நான் கூறிய இரண்டு வார்த்தைளும்
உயிர் புள்ளி இல்லை...
பூ நகைத்து விட்டு  இதழ் திறந்து கேட்டது
உனக்கு என்னுள் என்ன தெரிகிறது??? 
விதை என்றேன்...ஆமாம் அதிலும் உயிர் புள்ளி இல்லை...
தன்னை உதிர்த்து ஆயிரம் ஆயிரம்
விதைகளை விதைத்து விட்டு விடை பெற்றது பூ.

அடுத்து கண்ணில் பட்டது
ஏழை பார்த்தால் பாவம்.
உன்னை பற்றி....
''வேலை இல்லாததால் - நான்,
ஏழை இன்னும் சந்திக்காதது  கோழை;
உறவு இல்லாததால் நான் அநாதை''
அதிலும் உயிர் புள்ளி இல்லை.
''எனக்கு தெரிந்ததெல்லாம் பசி,வறுமை
ஐயோ எதிலும்  உயிர் புள்ளி இல்லை.
உன் ஆசை? ''சீக்கிரம் சாவு.''
இதற்க்கு மேல் கேட்க மனமில்லை.

அடுத்து கும்மிட போகும் முன்பே
குறுக்கே  வந்தது சாமி. 
உயிர் புள்ளி இல்லாத நீ என்ன சாதித்து விட்டாய் ??
சிரித்து விட்டு ''நான் சாதித்தது சாதி என்றது''.
சாதியும்,சாதனை-யும்,சதியும்  தெரியாது   தெரியாது
ஆஹா... எதிலும் உயிர் புள்ளி இல்லை என்று ஓடி போனேன்.

பளபளப்பாய்  இளமை வந்து நின்றது.
நீ என்ன சொல்ல காத்திருக்கிறாய்???
''முதுமை வரும் வரை
கனவை நினைவு  ஆக்கி  புதுமை காண
காத்திருக்கிறேன் என்றது''.புள்ளி இல்லாமல். 

மது போதையோடு  வந்து நின்றது.
அது சரி உன் சாதனை என்னவோ???
என்னை அடிப்பவன் எனக்கு அடிமை-என்று
தத்துவம் தந்து போனது.

அடுத்து வேறுயாரு மாதுதான்
உங்கள் பங்குக்கு எதுவும்...???
மண்ணிக்கவும் உரிமை 
இன்னும் கிட்டவில்லை
இலவே இல்லை என்றது.

இன்னும் எத்தனை எத்தனையோ...
உயிர் புள்ளி
இல்லாத வார்த்தைகள்
இவ்வளவு அர்த்தம் சொல்கிறது.
உயிருள்ள நாம்  என்ன அர்த்தம் தர போகிறோம்???.......

இதையும் படிங்க பிடிக்கும்...                                 இதுவும்                                                           

Tuesday, January 5, 2010

மாமனாருக்கு நேரம் சரி இல்லை...


மாமனாரே  உஷார்...
கொலை  வெறியோடு அலையும் ஒரு மருமகனின் நேரடி ரிபோர்ட்...

அவனுக்கு நேரம் நல்லா இருக்கு இல்லனா ஒவ்வொரு நிமிஷமும் என்கிட்ட இருந்து தப்பிபானா...இருக்கட்டும் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் ஒரே போடா போட்டுற வேண்டியதுதான்.வேற வழியே இல்லை.பின்ன எனங்க இப்டி ஒரு மாமனார் இருந்தா யாருக்குத்தான் கொலவெறி வராது நீங்களே சொல்லுங்க.

புருஷன் பொண்டாட்டின்னு  தான் பேரு, ஆனால் ஒரு நாளைக்கு ரெண்டு தடவைக்குமேல அவளை கட்டி பிடுச்சுக்க  முடியால. இந்த மாமனாரு வீட்டவே சுத்தி சுத்தி வர்றான்.பார்க்க நோஞ்சான் மாதிரி இருக்கான் நானும் இன்னைக்கு போவான் நாளைக்கு போயிருவனு பார்த்தா  இவனுக்கு ஒரு எம கண்டம்  வந்து தொலைய மாட்டிங்குது.வீட்டோட மாபிள்ளையா வந்தா இது ஒரு தொல்லை.

என்ன பண்றது ஒரு வேலைக்கும் போகாம வீட்டையே சுத்தி சுத்தி வந்தா இப்டிதான். மாமனார்  உழைப்புலதான்  நம்ம வாழ்கையே  ஓடுது ஹும்ம்ம்ம்..... என்ன செய்ய?? சரி ஒரு நாளைக்கு ரெண்டுதடவதான் சேர்ந்து  இருக்க விடுறான் அதுவும் எங்களுக்கு கடைசி ரூமா பார்த்து குடுத்துட்டு; நிமிஷத்துக்கு ஒருதடவ வந்து எட்டி,எட்டி பார்த்து மூட கெடுத்து விடுறான்.இவ்ளோ வயசு ஆய்டுச்சு கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லை.

இந்த குள்ளம்மா இவளுக்காவது புத்தி  வேண்டாம்.புருஷன் முந்தானைய பிடிச்சுட்டு பின்னாடியே சுத்துறானே இவன கொஞ்சம் கவனிக்கனும்னு தோணுதா??எங்க.....  பக்கத்துல போகும் போதெல்லாம் எங்க அப்பா வர்றாருனு வெளக்கி வெளக்கி போறா.ஒரு புள்ளைய பெத்து குடுடீன்னு சொன்னா.... வேணாங்க   குடும்பத்துல  குழப்பம் வந்துரும்னு சொல்றா.இந்தா கொடுமைய நான் எங்க போய் சொல்லுவேன்???இப்போ புதுசா கல்யாணம் முடிச்சவங்கலாம் ரெண்டு  பிள்ளை  மூணு பிள்ளையோட சந்தோஷமா இருக்காகே...

என் மாமனார் ஒருநாள் படுத்த படுக்கையா இருந்தான் ஆஹா  போய்  செந்துடானு  நெனச்சா. பழாபோன டாக்டர் வந்து ஏதோ நீட்டமா ஒரு மாத்திரைய போட்டு சரி பண்ணிட்டு போட்டாரு.இவனுக்கு எப்போ கெட்டநேரம்னு தெரியல எனக்கு எப்போ நல்லநேரம்னும் தெரியலை.

வீட்ட சுத்தி ரூமா கட்டி வச்சு இருக்கான். நேரம் போகலைனா ஒவ்வொரு ரூமா போய் வேடிக்கை பாக்குறதே வேலையா போச்சு.பொண்ணு கொஞ்சம் குள்ளமா இருந்தாலும் பரவா இல்லை வீடு நல்லா பெருசா இருக்கே நிறையா ரூம் இருக்கே கல்யாணம் பண்ணுனா வாடகைக்கு விட்டு பொழச்சுக்கலாம்னு பார்த்தா.ஒன்னும் முடியலையே...வழிய வந்து இப்டி மாட்டி கிட்டேனே...

என் பாட்டன் பூட்டன் எல்லாம் மாமனார போட்டு தள்ளிட்டு நல்ல எலக்கடையா  பார்த்து பொண்டாட்டியோட செட்டில் ஆய்டாகே.சிலபேர் நல்ல பொருட்காட்சியா பார்த்து செட்டில் ஆய்டாகே.என் பொழப்பு இப்படி நாறிபோச்சு.என்னைய பார்த்துட்டு இனிமேல்  வர்ரவன்கேலாவது திருந்தட்டும். 

ஆஹா...உங்ககூட பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல. இருங்க மணி பண்ணண்டு  ஆகபோகுது நான் போய் என் ஆளுக்கு ஒரு கிஸ்...அடிச்சுட்டு வர்றேன்...டிங்...டிங்...டிங்...டிங்... நொடி பொழுதில் வந்தாரு மாமனார்...

இன்னும்  கொஞ்சம் கதை கேளுங்க...

Monday, January 4, 2010

இது ரவுடிகள் ராஜியம்...


பெயர் : கடவா குரூப்ஸ்  மற்றும் நண்பர்கள்.
தொழில் : இவர்களிடம் வருபவர்களை அடித்து உடைத்து பல நேரம் கடித்து உரு தெரியாமல் ஆக்குவது...
பிடித்தது : தொழிலை சுத்தமாக செய்வது.
பிடிக்காதது : டாக்டர்களை.
பயப்படாதது : எந்த  காக்கி சட்டைக்கும். 
பயப்படுவது : இவர்களை போலவே இருக்கும் போலி குரூப்புகளை..
எங்களின்  தினசரி வாழ்வில் ஒரு நாள்....


ஒல்லியாய் சிக்கென்று கலர் கலரா  இருப்பாள்.கொடி  இடைனு சொன்னா அதுதான் கொடி இடை. இவனுக்கு மட்டும் எப்படி மாசம் ஒருத்தி  மாட்றாளோ??தெரியல... டேய் கடவா  பசங்களா  எங்க எல்லாத்தையும் விட  பெரியவன் நீங்கதான்   உங்க கிட்டதான் அவ ரெம்ப நேரம் கொஞ்சி கொழாவுறா... அவ பேரு என்னனு கேளுங்கடா... இவள் ஒருத்திதான் நம்ம மேல அக்கறைய இருக்கா பேர கேட்டு அப்டியே மடக்கி  போட்டா கொஞ்சநாளக்கு நாங்களும் ஜாலியா இருப்போம்ல....


அட போங்கடா தினமும் யாருடா அதிகமா வேலை செய்றா??நாங்கதான் அதான் எங்கள   கொஞ்ச அதிகமா கவனிக்குறா,  அது உங்களுக்கு பொறுக்கலையா??அதுவும் கொஞ்சம் லேட்டா ஆய்டுச்சுனா  அவள அனுப்பாம வெறும் தண்ணி மட்டும்தான்  குடுக்குறான்  அந்த ''இத்து''  போனவன்.
நாங்க  பாட்டுக்கு ஒரு ஓரமா எங்க  வேலைய பாத்து கிட்டு இருக்கோம்.எதாவது பொண்ணு வந்தா   எப்பவும் முன்னாடி நின்னு ஈ...னு ஈளிசுகிட்டு   போய்டுரீங்க  யாரு  அடிச்சாலும்  எங்க சைடு தான்  அடிக்கிறாகே...  .;


அதுவும் இந்த ரப்பர் தலையன் வந்தா யார அதிகமா  வேலை வாங்குறான்?? எங்களைதான்... தினமும் ஒருதடவையாவது கவனிப்பான்னு  பார்த்தா இந்த ''இத்து'' போனவன் இவ்ளோ  சோம்பேறியா இருக்கான். போன வாரம் என் நண்பன டாக்டர்கிட்ட காமீக்குரேன்னு  கூட்டி போய்    என்னவோ ஆபரேசன் பண்ணறேன்னு அவனையும்  கொன்னுடான் .இந்த ''இத்து'' போனவனுக்காக கஷ்ட்ட படுறது நாங்க;ஆனால்  எங்கள சரியாய் கவனிக்க மாட்டிங்குறான்.எத்தன நாள் வெறும் தண்ணி மட்டும் காட்டிருக்கான்  தெரிமா??அவ்வவ்வ்வ்வ்....நீங்கதான் அவனுக்கு எப்பவும் ஸ்பெஷல்.


அட போட இவனே..
 இந்த ''இத்து'' போனவன் யார்கிட்டயாவது வம்பு இழுத்து சண்டை போட்டா யாருடா அவனுக்காக  அடிவங்குறது...பன்ச்சு விட்டு எங்கலதாண்டா  மோதல அடிச்சு உடைக்குறாங்கே  நாங்க நிக்குறது டேஞ்சர் சோன் மாப்ளே.


ஒவ்வோறு தடவயும் உலகத்த பார்க்கும்போது பக்கு பக்குன்னு இருக்கு தெரிமா..!! எவளையாவது கிண்டல் பன்னிருவானோ என்னவோ ஏதோனு பயமா இருக்கும்.


அது சரி என்னடா... இவ்வளோ நேரமாச்சு இன்னும் தூங்குறான் எவ்ளோ நேரம்தான் மூக்க பிடிச்சுட்டு நிக்குறது?? தாங்க முடியல.  ''இத்து''  போனவன் நைட்டு என்னத்த தின்னான்னு  தெரியல...
 அவளை சீக்கிரம் கண்ணுல காட்டுடா... முடியல....


அவன் கொஞ்சமா கண்ணு முழிச்சு பார்த்தான்.டேய் முழிசுடாண்டா ...ரெடியா இருங்கடா...ஆனால் அவன் அவளை கூப்டாம உள்ள  போய் வெறும் தண்ணி மட்டும் குடுத்துட்டு வந்துட்டான்.. டேய்  இன்னைக்கும் தண்ணி மட்டும் தாண்டி மாப்ளே...நம்ம குடுத்து வச்சது அவ்ளோதான்.இப்படியே போச்சுனா  நம்ம எல்லோரும் சீக்கிரம் செத்துடுவோம்   போல. நாம எல்லாம் எவ்வளோவோ  பரவாஇல்லடா  எங்க அப்பன்  ''பால்''  உயிரோட   இருக்கும்போது  ரெம்பநாள் தண்ணிகூட குடுக்காம  இருந்துருகான். புண்ணியவான்  அல்பாயிசுலையே போய் சேந்துட்டான்... அட விடுடா...என்னைக்குனாலும் சாவு வரத்தான் போகுது. நாம என்ன இவன் பொறக்கும்போது இவன் கூடவே வா பொறந்தோம்.விடுங்கடா...


அவனுக்கு மனசு மாறியது அவளையும் கூப்ட்டு அவ கைல கொஞ்சம்  சரக்கை குடுத்து போய் அவேன்கேள நல்லா   கவனிச்சுட்டுவானு  அனுப்பி  வச்சான். (நாங்க பேசுனது அவனுக்கு கேட்டுருச்சோ??)

அவ வந்ததும் முதலில் கடவா  குரூப்ப  கவனிச்சா. அவ என்ன சரக்கு கொண்டு  வந்தானு தெரியல நல்ல வாசனை ,செம்ம நுரை.
அவ எங்களையும் நல்லா கவனிச்சுட்டு  போயிட்டா.


அவன் மறுபடியும் கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு  வழக்கம் போல ஆரம்பிச்சான்.முதலில் கருப்பா ரெண்டு குண்டனுகள அனுப்பி வச்சான் அவகேள  அடிச்சு ஒடச்சு உள்ள தூக்கி போட்டோம். அவகே  பேரு சீடையாம்.வரிசையா வேற வேற ஐட்டம் வழக்கம் போல ஆரம்பிச்சுட்டான் அந்த ''இத்து'' போன சாப்பாட்டு ராமன்.
இதையும்  படிங்க பிடிக்கும்...      இதுவும்...      


                                                  

Sunday, January 3, 2010

எவனோ சூனியம் வச்சுட்டாகே...

பாலாவும் நானும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். எங்கு  போனாலும் என்ன செய்தாலும் ஒன்னாதான் இருப்போம்.  எங்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இரட்டை பிள்ளைகள் என்றுதான் கூப்டுவாங்க. அதற்க்கு ஏத்த   மாதிரி உருவ ஒற்றுமையும் இருக்கும்.காலைல சண்ட போடுவோம் சாயங்காலம் ஒன்னா ஊர் சுத்துவோம். கோடை விடுமுறைக்கு அவங்க ஊருக்கு நானும் கூட போவேன், அவங்க வீட்டுல நானும் ஒரு பிள்ளை.

ஒருநாள் எங்க வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல ஒரு சின்ன ஓடை இருக்கும் கொஞ்சம் ஆழமாதான் இருக்கும்.அங்கு போனோம் எனக்கு நீச்சல் தெரியாது அவனுக்கு தெரியும்.நான் வேடிக்கை பார்த்து கால் நனைப்பதோடுசரி.

அவன் என்னையும் தண்ணிக்குள் அழைத்தான் ''எனக்கு பயமா இருக்குடா நான் வரல ''என்றேன்.''டேய்...ஒண்ணுமே இல்லடா  நான் இருக்கேன்ல'' என்றான். ''இல்லடா எங்க அப்பாக்கு தெரிஞ்சா என்னைய  கொண்டே போடுவாருடா நான் வரலை''.
''டேய் ஒன்னும் ஆகாது நான் பாத்துக்குறேன்  வா'' என்றான். ''ம்ம்ம்ம்...தெரியும்டா  அடிக்குறத நல்லா வேடிக்கை பார்ப்ப''. ''என்னடா இவ்ளோ பயந்தாகொலியா  இருக்க'' ஆஹா நம்மள  பயந்தாகொளினு சொல்லிட்டானே...  அப்படின்னு எனக்குள்ள இருந்த சிங்கம் என்னைய தண்ணில தள்ளி விட்டுருச்சு.உள்ள போய் கொஞ்சம் தண்ணிய குடிச்சு இரும்பிகிட்டே வெளிய வந்தேன் தோள் கொடுத்தான் தோழன். அடடா அப்போதான் சட்டை, பேன்ட்  எதையுமே கழட்டாம குதுசிடேன்னு தெரிஞ்சது. உள்ள இருந்த சிங்கத்த ஆளவே காணோம். ஒரு கொரங்கு வந்து கி..கி..கி...னு சிரிச்சுட்டு ''மகனே உனக்கு இன்னிக்கு   பொறந்தநாள் கொண்டாட போராங்காடி....''

அவ்வ்வ்வ்...நிஜமாவே அன்னிக்கு எனக்கு  பொறந்தநாள் புது சட்டை போச்சு (சட்டை மட்டும்தான் புதுசு.)நான் செத்தேன்.வேகமா கரைக்கு போய் சுத்தி முத்தி யாரும்  பொம்பள புள்ளைங்க வருதான்னு பாத்துட்டு  சட்டையும் பேன்டையும் கழட்டி ஒரு பாறைல காயவசேன்.அவன் ஆனந்தமா குளிச்சுட்டு வந்தான்.நல்ல வெயில் கொஞ்ச நேரத்துல மூனும்  நல்லா   காஞ்சுருச்சு.(என்னையும் சேர்த்து)...அப்பாடா தப்பிச்சேன்டானு ரெண்டையும் மாட்டிகிட்டு கெளம்புனோம்.

வீடு வந்தாச்சு அப்பா ரெடியா இருக்காரு.?? ஆமாங்க அதேதான் எந்த சொறி புடிச்வனோ சூனியம் வச்சுட்டு எக்ஸ்ட்ரா ரெண்டு எழுமிச்சம் பழத்த  புளிஞ்சு விட்டுட்டு எங்கள போட்டு குடுத்துட்டு போயிருக்கான்.அப்பா என் முடிய பிடிச்சு இழுத்து அடி பின்னி எடுக்குறாரு...நண்பன் சொன்ன சொல்லை கரெக்ட்டா காபாதிட்டான்  கிரிகெட்  மேச் பாக்குற மாதிரி கடைசி பால் வரைக்கும் சேனல மாத்தாம நின்னு பாக்குறான்.

அப்பாவோட அடுத்த எய்ம் பாலா.அவன் கிட்ட போனாரு அப்போதான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருதுச்சு. அவன் கண்ணுல ஒரு பயம் தெரிஞ்சது.''இவன் கூட செந்தா நீயும்  கெட்டு குட்டி செவுரா போயிருவ... போடா  உங்க வீட்டுக்கு'' என்றார். அவன் ஓடி போய்ட்டான்.ஆஹா பயவுள்ள எஸ்கேப் ஆய்ட்டானே.அப்பா அவரோட செகேண்டு  இன்னிங்க்ஸ்  ஆரம்பிச்சுடாரு...

கொஞ்ச நேரத்துல பாலா அம்மா,அப்பா ரெண்டு பெரும் வந்தாங்க.தப்பிச்சுட்டோம்னு நெனச்சேன்.ரெண்டு பெரும் சண்டை போடுறாங்க.''என் புள்ளைய எப்படி நீங்க கெட்டவன்னு சொல்லலாம்...'' இது பாலா அம்மா.''என் புள்ளைய நீங்க எப்படி அடிக்கலாம்...'' இது பாலா அப்பா...எனக்கு புல்லரிச்சு போச்சு..ஆனால் அப்றம் தான் தெரிஞ்சது அவங்க பாலாவ பத்தி பேசுறாங்கனு.

பயவுள்ள அங்க போய் உல்ட்டாவா   போட்டு விட்டுட்டான்.ரெண்டு பெரும்  சண்டை போட்டு போய்ட்டாங்க.உள்ளுக்குள்ள இன்னொரு இன்னிங்க்ஸ் ஆடுவாரோனு பயம் நல்லவேளை இல்லை.மேச் முடிச்சுட்டு   போயிட்டாரு. ரெண்டு குடும்பமும் பேசாம கொஞ்ச நாள் இருந்தாங்க.அனால் அன்னிக்கு  சாயங்காலம் டேய் எங்க மாமா அல்லவா வாங்கிட்டு வந்துச்சுடா இந்தா...ஹாப்பி  பர்த்டே டா...னு ஊட்டி விட்டான். ரெண்டு பெரும் பாதி பாதி சாப்டோம்.
     
இதையும் படிங்க பிடிக்கும்...                                                                                                       


                                                      

Friday, January 1, 2010

கோவம் வேண்டாமடி என் செல்லமே...


ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர்கள் அவர்கள். வழக்கமான காலை பொழுது ...வந்துட்டியா, வந்துட்டேன்...இந்தா உம்ம்மஹா...தினமும் காலைல உனக்கு இதேவேலை  முதலாளி இருக்காரு சத்தம்  கேக்கும்ல...அவரு அதெல்லாம் கண்டுக்க  மாட்டாரு...
இப்படி அழகான வழக்கை இவர்களுடையது......   
                  
ஒரு வாரமாவே அவனை கண்டால் அவளுக்கு என்னவோ போல் இருக்கு.(ஈகோ )இபோதெல்லாம், அவன்தொடவரும்போதெல்லாம் அவன்மேல்  மேல்எரிந்து விழுகிறாள்....  

அரை  வாய்  திறந்து, ஓட்டை பல்லோடு, எந்நேரமும்  இளித்து  கொண்டிருக்கும்   ஒஜான்  ஒல்லி பயலே  உனக்கு மட்டும்  ஏன் அப்படி ஒரு ஒய்யார வாழ்க்கை!!?

 இரவெல்லாம் கண்விழித்து மழை வெயில் பாராமல் எவன் வருவனோ என்ன பண்ணுவானோ என்று வேலை பார்ப்பது    நான், ஆம்பளை என்பதால்   உனக்கு மட்டும் ஏ.சி ரூமில் ஏகபோக வாழ்க்கையா...!!??

 பிந்து கோஸ்  என்னை, ஓமகுச்சி நீ, என்னமாய் ஆட்டி வைகிறாய் திண்டுக்கல் குண்டம்மா கூட நீ சொன்னால்  வாய் மூடி ஊமையாய் போகிறாள்.
நீ மட்டும் என்ன அவ்வளோ ஒசத்தி??ஆம்பளை என்பதாலா??? 

'' செல்லம் என் மேல என்ன கோபம் உனக்கு??  நான் வேறு,  நீவேறு என்று ஏன் என்னை பிரித்து பார்க்கிறாய் நான் இல்லாமல் நீ இல்லை  நீ...இல்.......'' நிறுத்து !! பணக்காரனின் பையிலே பவனிக்கிறாய்  அல்லவா உனக்கு இதுவும் இருக்கும் இன்னமும் இருக்கும்.
என்ன சொன்ன??  நீ இல்லாமல் நான் இல்லையா... என் ஒரு அடிக்கு நீ தாங்குவாயா!!??அதை விடு என்னை விற்றால் கொஞ்சம் பேரிச்சம்பழமாவது தேறும், உன்னை எவன் சீண்டுவான்.அவன்''......................''

நீ வேறு, நான் வேறு இல்லை என்று சொல்கிறாயே; ஒரு நாள் ராத்திரியாவது  என்னோடு ஒன்னா  தனியா இருக்க முடியுமா  உன்னால் ??.அது சரியாகாது  செல்லம்... நான் ஜான் பிள்ளை  என்றாலும் ஆண் பிள்ளை இதுதான் நியதி.முதலாளிக்கு யார் பதில் சொல்ல முடியும்??

 இறுதியில் உன் ஆம்பள புத்தியை காமிசுட்ட பாத்தியா...!!எனக்கு நீ வேண்டாம் போய்விடு என்னால் தனியா வாழ முடியும்.
முடியாது!! உன்னை விட்டு என்னால இருக்க முடியாது செல்லம்... கொஞ்சம் கோபத்தை விட்டுட்டு  யோசிமா. நான் இல்லாம எப்படி உன்னால வாழ முடியும்!? நான் இல்லனா உன்ன யாரும் மதிக்க மாட்டங்க மா... சொன்னா கேளு... ப்ளீஸ் அமைதி.

இல்ல நான் முடிவு பண்ணிட்டேன், நாளைக்கு என் முகத்துல முழிக்காத இதுதான் லாஸ்ட் ப்ளீஸ் என்ன நிம்மதியா விடு...இருவரும் பிரிந்தார்கள்.அவன் முதலாளியோடு போனான்.

 வழக்கம போல் மறுநாள் காலை, அவன் வழக்கம் போல் வந்தான். ''ஹாய் செல்லம் கோபம் போயிருச்சா??'' அவள் ஏதும்  பேசவில்லை ஏ....ப்ளீஸ் வாயதொறந்து பேசுமா...ம்ம்ம்ஹும்ம்...அவள் ஊமையாய் இருந்தாள் அவன் என்னவோ தாஜா பண்ணி பார்த்தன் ஒன்னும் நடக்க வில்லை.

 ''ஹே இங்க பாரு டா..நீ வாயதொரக்கலனா நம்ம ரெண்டு பேரையும் கொன்னுடுவாங்க ப்ளீஸ்....''ரெம்ப நேரம் ஆகியும் அவள் வாய் பூட்டியே இருந்தாள்.அவன் கெஞ்சி கெஞ்சி சோர்ந்து போனான்...

திடீர் என்று யாரோ  சுத்தியால் அவளின்  தலையில் ஓங்கி அடிக்க  அவள் மயங்கி போனால் யார்!!?? என்று பார்த்தால்; அவனின்  முதலாளி அவனையும் அவளையும் பிரித்து வைத்து விட்டு அவளை மட்டும்  கூறு கூறாக அறுத்து  வீசி எறிந்தார்  முதலாளி.

 அவனை மட்டும் முதலாளி கையேடு அழைத்து   போனார். அங்கு வேலை பார்க்கும் பையன் இதையும் தூக்கி போடுங்க முதலாளி. ''பழக்க தோஷம் டா.......காலங்காதாலயே     ஒரு செலவு...சரி சரி நீ போய் நல்ல பூட்டா பார்த்து வாங்கிட்டு சிக்கிரம் வா...''அப்போ சாவி வேண்டாமா முதலாளி!!??
டேய் .....சாவி இல்லாம பூட்டு  எதுக்குடா...போட...கிறுக்கு பயலே...               

                                                                      
Related Posts with Thumbnails