Sunday, December 19, 2010

நானும், ப்ளாக்கானந்தாவும்...

நம்ம பட்டறைல உட்கார்ந்து ரெம்ப தீவிரமா என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்(ஈ ஓட்டுறதுக்கு இப்படியும் சொல்லலாம்).முன்ன மாதிரி நேரம் கிடைக்க மாட்டீங்குதே...(கிடச்சுடாலும்...)இப்படியே போனா...(முடிவே பண்ணிடீயா??) பட்டறை பாழடைஞ்சு பாம்பு பல்லிலாம் வந்து குடியிருக்க ஆரம்பிச்சுரும் போலிருக்கே. நானும்தேன் கட்டிங்கு வச்சுருக்கேன் ஆனா கொஞ்சம் கூட கிக்கு ஏறவே மாட்டிங்குதே.இப்படியே யோசிச்சுகிட்டே மௌச தேச்சுகிட்டே இருந்தேன். திடீர்னு !!கிபோர்ட்ல இருந்து பொகையா கேளம்பீருச்சு...(ஆவி வந்துருக்குமோ??)ஆஹா நம்ம பொலம்பல் கேட்டு கம்ப்யுட்டரே பொசிங்கிருச்சு எவண்டா தீயவச்சதுன்னு திருதிருன்னு முழிக்குறேன்.பக்கத்துல பார்த்தா பளபளன்னு  ஒரு உருவம் எந்திரன் சிட்டி மாதிரி உட்கார்ந்து இருக்கு.(யாரோ சூனியம் வச்கிருபாங்களோ....) 


ஏய்! யாருப்பா  நீ !!! எப்படி  ரூமுக்குள்ள  வந்த?னு கேட்டா ப்ளீஸ்  செலெக்ட் லாங்குவேஜ்னு நாக்க லாங்கா நீட்டுச்சு.(அத நாக்கலையா வப்பாங்கே..) நானும் தமில தேடி கண்டுபிடிச்சு  தொட்டேன்.சர்ர்ர்ர்ருன்னு நாக்கு  உள்ள  போயிருச்சு.வணக்கம் வெளிய வந்துச்சு.(வாந்தி வராத வரைக்கும் சந்தோசம்) நான்தான் ப்ளாக்கானந்தா பவர்ட் பை கூகுள் உன் ப்ளாக் பத்தி எல்லாம் தெரியும் எனக்கு (அட இங்கேயுமா??).யோவ் எப்படா இப்படி ஒருத்தன் மாட்டுவான்னு காத்துகிட்டு இருப்பிங்களா?? நானே நொந்து போய் இருக்கேன் நீவேற வந்து காமெடி பண்றியா ஒழுங்கா ஓடி போயிரு(அவ்வ்வ்வவ்வ்வ்..).ஏய்!!! உன் பேரு சீமான்கனி கனவு பட்டறைன்னு ஒரு ப்ளாக் எழுதுற.இருவரைக்கும் மொத்தம் ஐம்பதாயிரம் பேரு வந்து உன் ப்ளாக்க வந்து பாத்துருக்காங்க.நீ மொத்தம் 125 பதிவு எழுதி இருக்க.அதுல....



 இப்படி பலரகமா பிரிச்சு ரணகளம் பண்ணி வச்சிருக்க...இன்னும் மூணு கவிதை போஸ்ட் பண்ணாம டிரப்ட்டுல கிடக்கு மொத்தம் கணக்கு 128.அப்டி இப்டின்னு ஒரு தொண்ணுறு பேரு உனக்கு 1400  பின்னுட்டம் போட்டு இருக்காங்க."ஆத்தாடி...!!!" ஆதாடியாவது காதாடியாவது இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ...கொஞ்சநாளாவே நீ சரியா ப்ளாக் பக்கம் வர்றது இல்ல.யாரு பதிவையும் சரியா படிக்குறதும் இல்ல.கடமைக்கு ஒரு கவிதைய போட்டுட்டு கம்பிய நீட்டிடுற.உன்னை நிறையா பேரு தேடுறாங்க அதுல பாதிப் பேரு கட்டையோடு தேடுறாங்க(இனி மண்டைல ஹெல்மெட் போட்டு தாண்டி போகணும்).இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா??ம்ம்ம்ம்.....ன்னு விஜயகாந்த் மாதிரியே நாக்கக் கடிக்குது.ஆஹா..நீங்க உண்மைலேயே மகான்தான் நான் ஏதும் தப்பா பேசி இருந்தா மன்னிச்சிருங்க  ப்ளாக்கானந்தா.(ஏய் பவர்ட் பை கூகுள்-ல விட்டுட்டியே...)மறுபடியும் சாரிங்க.ஆமா இப்போ எதுக்கு என்ன தேடி வந்தீங்க???உன் கனவு பட்டறைல ஏதோ தோஷம் இருக்கு அத சரி பண்ணத்தான்(வந்துடாகே டா....).எங்க உன் விரல காட்டு ரேக பார்க்கணும். காட்டுனேன்...

ம்ம்ம்ம்...மொக்க ரேகை மொடங்கி போச்சு.கும்மி ரேக குறுகிபோச்சு.தொடர் கவித ரேக தொடராம போச்சு.கவித ரேக கொஞ்சம் கனமா இருக்கு.மத்த ரேகை எல்லாம் செத்த ரேக.ம்ம்ஹும்ம்ம்...இது தேறாது.இப்படியே போச்சுனா கூகுளே ப்ளாக்க மூடிட்டு போடான்னு சொல்லிடும்.ஐயோ!! இதுக்கு ஏதும் பரிகாரம் இல்லையா???

இருக்கு டெய்லி ஒரு பதிவு போடணும்,மொக்கை போட்டு அதுல கும்மியடிக்கனும்,எல்லோருக்கும் ப்ளாக் லிங்க் அனுப்பனும்,சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கும்.

நான் என்ன வச்சுகிட்டு  வஞ்சனயா பண்ணுறேன் முன்ன மாதிரி நேரம் கிடைக்குறது இல்ல....ஹும்ம்ம்ம்...இருந்தாலும் முயற்சி பண்றேன்.உங்க டிப்ஸுக்கு ரெம்ப நன்றி  ப்ளாக்கானந்தா.சரி!சரி உன்னை மாதிரி யாரோ பொலம்புற சத்தம் கேட்ட்குது நான் அங்க போறேன்னு மறஞ்சு போயிட்டாரு.இதனால மக்களே என்ன சொல்ல வர்றேன்னா.... உங்க ப்ளாக் பக்கம் வரலையேன்னு யாரும் என்மேல கோபப்படாதீங்க.சீக்கிரமே முன்ன மாதிரி வந்து ஒரு கை பார்ப்போம்.ம்ம்ம்ம்..இருங்க இருங்க எங்க எஸ்கேப் ஆகுறீங்க...இப்போ இது தொடர் பதிவா வலம் வர போகுது நான் இப்போ நண்பர்கள் சிலரை இந்த பதிவ தொடர அழைக்கிறேன்.ஒன்னும் இல்ல இந்த ப்ளாகானந்தாஉங்களை பார்க்க வந்திருந்தா என்ன நடந்திருக்கும் அப்டின்னு....பதிவுல எழுத போறீங்க.நீங்களும் நாலு பேர ப்ளாக்கானந்தா கிட்ட மாட்டி விடப்போறிங்க....
நான் மாட்டி விட்டது....

3 .சிரிப்பு போலீஸ் நண்பர் ரமேஸ்...
4 .ஜெய்லானி அண்ணாத்தே...

விருப்பம் உள்ளவர்களும் தொடரலாம்...நன்றி...












Sunday, December 12, 2010

தித்திக்கும் தீ ...





எப்போதும் காதலோடு காத்திருக்கும்-நீ
இன்று கொஞ்சம் காய்ச்சலோடும் காத்திருந்தாய். 
கண்டதும் வந்து கட்டிக்கொள்ளும் 
காதல் கன்னுக்குட்டி நீ! இன்று ஏனோ !?
கட்டிலே கதியாய் கிடக்கிறாய்.

 உஷ்ணம் யாசிக்கும் உன்னை முத்தமிட்ட - என் 
இதழ்மாணி சொல்லியது - உன் 
அனல் மேனியின் வெப்ப அளவை.

வைரஸ்க்கு வாக்கப்பட்ட - உன் 
திசுக்கலேல்லாம் தீக்குளித்து  
தேகக்கூட்டில் தேவைக்கு அதிகமாய் உஷ்ணம். 
அதற்க்கு அடையாலமாய் - உன் 
இரவு உடையில் இறந்துகிடந்தது சில லட்சம் பூக்கள். 
கால் கொலுசு சிரிக்காமல் அறையில் எதோ குறை.

"என்ன?" என்றேன் "
ஒன்றும் இல்லை கொஞ்சமாய் காய்ச்சல்" .
"மருந்து எடுத்தாயா?"  
”இல்லை...உனக்காகத்தான் காத்திருக்கிறேன்" 
"எனக்காகவா!!எதற்கு?? " 
நீதானே சொன்னாய் ”நீ பாதி நான் பாதி” என்று
எனக்கு காய்ச்சல் என்றால் என்னுள் இருக்கும் 
உனக்கும் தானே உஷ்ணம் தாக்கி இருக்கும் 
அப்படி இருக்க நான் மட்டும் மருந்து எடுத்தால் 
காதல் பழிக்கும் இல்லையா ?”என்றாய். 
"ஓ...அப்படியா!!?சரி கசக்காத மருந்து கொடு" .

இது கசக்காது சுடும் என்று 
இமைகளை மூடச்சொல்லி 
இதழ்களால் இதழ்களை தீமூட்டி
மருந்து ”ரெம்ப சுட்டதா” என்றாய்.
ஆம் காய்ச்சல் சூட்டை விட 
காதல் சூடு கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் 
இந்த தித்திக்கும் தீயால்
இன்னும் கொஞ்சம் இதழ்சுடு”
நம் காதல் காலத்தில் 
இனி காய்ச்சல் அடிக்கடி வரட்டும்.

காதலில் காய்ச்சலும்கூட சுகமாய் சுடுகிறது.  



கம்.


Related Posts with Thumbnails