நம்ம பட்டறைல உட்கார்ந்து ரெம்ப தீவிரமா என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்(ஈ ஓட்டுறதுக்கு இப்படியும் சொல்லலாம்).முன்ன மாதிரி நேரம் கிடைக்க மாட்டீங்குதே...(கிடச்சுடாலும்...)இப்படியே போனா...(முடிவே பண்ணிடீயா??) பட்டறை பாழடைஞ்சு பாம்பு பல்லிலாம் வந்து குடியிருக்க ஆரம்பிச்சுரும் போலிருக்கே. நானும்தேன் கட்டிங்கு வச்சுருக்கேன் ஆனா கொஞ்சம் கூட கிக்கு ஏறவே மாட்டிங்குதே.இப்படியே யோசிச்சுகிட்டே மௌச தேச்சுகிட்டே இருந்தேன். திடீர்னு !!கிபோர்ட்ல இருந்து பொகையா கேளம்பீருச்சு...(ஆவி வந்துருக்குமோ??)ஆஹா நம்ம பொலம்பல் கேட்டு கம்ப்யுட்டரே பொசிங்கிருச்சு எவண்டா தீயவச்சதுன்னு திருதிருன்னு முழிக்குறேன்.பக்கத்துல பார்த்தா பளபளன்னு ஒரு உருவம் எந்திரன் சிட்டி மாதிரி உட்கார்ந்து இருக்கு.(யாரோ சூனியம் வச்கிருபாங்களோ....)
ஏய்! யாருப்பா நீ !!! எப்படி ரூமுக்குள்ள வந்த?னு கேட்டா ப்ளீஸ் செலெக்ட் லாங்குவேஜ்னு நாக்க லாங்கா நீட்டுச்சு.(அத நாக்கலையா வப்பாங்கே..) நானும் தமில தேடி கண்டுபிடிச்சு தொட்டேன்.சர்ர்ர்ர்ருன்னு நாக்கு உள்ள போயிருச்சு.வணக்கம் வெளிய வந்துச்சு.(வாந்தி வராத வரைக்கும் சந்தோசம்) நான்தான் ப்ளாக்கானந்தா பவர்ட் பை கூகுள் உன் ப்ளாக் பத்தி எல்லாம் தெரியும் எனக்கு (அட இங்கேயுமா??).யோவ் எப்படா இப்படி ஒருத்தன் மாட்டுவான்னு காத்துகிட்டு இருப்பிங்களா?? நானே நொந்து போய் இருக்கேன் நீவேற வந்து காமெடி பண்றியா ஒழுங்கா ஓடி போயிரு(அவ்வ்வ்வவ்வ்வ்..).ஏய்!!! உன் பேரு சீமான்கனி கனவு பட்டறைன்னு ஒரு ப்ளாக் எழுதுற.இருவரைக்கும் மொத்தம் ஐம்பதாயிரம் பேரு வந்து உன் ப்ளாக்க வந்து பாத்துருக்காங்க.நீ மொத்தம் 125 பதிவு எழுதி இருக்க.அதுல....
ஏய்! யாருப்பா நீ !!! எப்படி ரூமுக்குள்ள வந்த?னு கேட்டா ப்ளீஸ் செலெக்ட் லாங்குவேஜ்னு நாக்க லாங்கா நீட்டுச்சு.(அத நாக்கலையா வப்பாங்கே..) நானும் தமில தேடி கண்டுபிடிச்சு தொட்டேன்.சர்ர்ர்ர்ருன்னு நாக்கு உள்ள போயிருச்சு.வணக்கம் வெளிய வந்துச்சு.(வாந்தி வராத வரைக்கும் சந்தோசம்) நான்தான் ப்ளாக்கானந்தா பவர்ட் பை கூகுள் உன் ப்ளாக் பத்தி எல்லாம் தெரியும் எனக்கு (அட இங்கேயுமா??).யோவ் எப்படா இப்படி ஒருத்தன் மாட்டுவான்னு காத்துகிட்டு இருப்பிங்களா?? நானே நொந்து போய் இருக்கேன் நீவேற வந்து காமெடி பண்றியா ஒழுங்கா ஓடி போயிரு(அவ்வ்வ்வவ்வ்வ்..).ஏய்!!! உன் பேரு சீமான்கனி கனவு பட்டறைன்னு ஒரு ப்ளாக் எழுதுற.இருவரைக்கும் மொத்தம் ஐம்பதாயிரம் பேரு வந்து உன் ப்ளாக்க வந்து பாத்துருக்காங்க.நீ மொத்தம் 125 பதிவு எழுதி இருக்க.அதுல....
- Technology (2), அக்கா (1), அசிங்கம் (2), அனுபவம் (21), ஆதங்கம் (2), இது காதல் கடிதம் அல்ல..(13), ஐம்பதாவது பதிவு (2), கதை (4), கதை கேளு (5), கவிதை (62), கோபம் (2), சிறுகதை (1), தொடர் பதிவு (4), நட்பு (2), நன்றிகள் (1), நீ நான் மற்றும் நமக்கான வானம்... (6)
- படங்கள் (2),பதிவு நூறு... (1), மொக்கை (13), ரஹ்மான் (3), விவாதம் (2), வீடியோ (6), ஹைகூ (2)
ம்ம்ம்ம்...மொக்க ரேகை மொடங்கி போச்சு.கும்மி ரேக குறுகிபோச்சு.தொடர் கவித ரேக தொடராம போச்சு.கவித ரேக கொஞ்சம் கனமா இருக்கு.மத்த ரேகை எல்லாம் செத்த ரேக.ம்ம்ஹும்ம்ம்...இது தேறாது.இப்படியே போச்சுனா கூகுளே ப்ளாக்க மூடிட்டு போடான்னு சொல்லிடும்.ஐயோ!! இதுக்கு ஏதும் பரிகாரம் இல்லையா???
இருக்கு டெய்லி ஒரு பதிவு போடணும்,மொக்கை போட்டு அதுல கும்மியடிக்கனும்,எல்லோருக்கும் ப்ளாக் லிங்க் அனுப்பனும்,சும்மா இருக்குற பதிவர கவிதையோ, கட்டுரையோ இல்ல தொடர் பதிவோ போட்டு வம்புக்கு இழுக்கணும்,பின்னுட்டத்தை சும்மா மின்னுட்டம் மாதிரி கொடுக்கணும் இதெல்லாம் செஞ்சா... ஒரு வழி பொறக்கும்.
நான் என்ன வச்சுகிட்டு வஞ்சனயா பண்ணுறேன் முன்ன மாதிரி நேரம் கிடைக்குறது இல்ல....ஹும்ம்ம்ம்...இருந்தாலும் முயற்சி பண்றேன்.உங்க டிப்ஸுக்கு ரெம்ப நன்றி ப்ளாக்கானந்தா.சரி!சரி உன்னை மாதிரி யாரோ பொலம்புற சத்தம் கேட்ட்குது நான் அங்க போறேன்னு மறஞ்சு போயிட்டாரு.இதனால மக்களே என்ன சொல்ல வர்றேன்னா.... உங்க ப்ளாக் பக்கம் வரலையேன்னு யாரும் என்மேல கோபப்படாதீங்க.சீக்கிரமே முன்ன மாதிரி வந்து ஒரு கை பார்ப்போம்.ம்ம்ம்ம்..இருங்க இருங்க எங்க எஸ்கேப் ஆகுறீங்க...இப்போ இது தொடர் பதிவா வலம் வர போகுது நான் இப்போ நண்பர்கள் சிலரை இந்த பதிவ தொடர அழைக்கிறேன்.ஒன்னும் இல்ல இந்த ப்ளாகானந்தாஉங்களை பார்க்க வந்திருந்தா என்ன நடந்திருக்கும் அப்டின்னு....பதிவுல எழுத போறீங்க.நீங்களும் நாலு பேர ப்ளாக்கானந்தா கிட்ட மாட்டி விடப்போறிங்க....
நான் மாட்டி விட்டது....
1 .மாப்பி.....♥ப்ரியமுடன்......வசந்த்
2 .எல்லாப்புகழும் இறைவனுக்கே ஸாதிகா அக்கா...
3 .சிரிப்பு போலீஸ் நண்பர் ரமேஸ்...
4 .ஜெய்லானி அண்ணாத்தே...
விருப்பம் உள்ளவர்களும் தொடரலாம்...நன்றி...