அவளும் அவள் சார்ந்த இடமும்...
ஓர் கார்கால ராத்திரியில்
அவளைப்பற்றி கவிஎழுத
அவனிடம் கேட்கிறாள்.
மந்தார படுக்கையில மாமன் இவன் கிடக்கையில
அன்னாந்து முகம் பார்த்து ஆசமொழி சொன்னவளே...
கார்கால ராத்திரியில் மெழுக ஒழுகவிட்டு
கவித எழுத கேட்டவளே...
கண்ணெதிரே ஒருகவித கண்ண கண்ண சிமிட்ட,
கண்ணே ஒரு கவித காசுக்கும் எழுதமாட்டேன்....னு அவன் சொல்ல
கண்ண கைகொண்டு கட்டிவிட்டு கவி கேட்டு அவள் நிற்க.
இந்த இருட்டு விழி இப்போ குருட்டு விழியடி
விரலுக்கு விழி பொருத்தி வீணையாய் உனை மாற்றி
கவி மீட்ட கரைகிறேன் கேளடி என்றான்....
தொடரும்...