Friday, January 22, 2016

அவளும் அவள் சார்ந்த இடமும்...

அவளும் அவள் சார்ந்த இடமும்...

ர் கார்கால ராத்திரியில்
அவளைப்பற்றி கவிஎழுத
அவனிடம் கேட்கிறாள்.

ந்தார படுக்கையில  மாமன் இவன் கிடக்கையில
அன்னாந்து முகம் பார்த்து ஆசமொழி சொன்னவளே...
கார்கால ராத்திரியில்  மெழுக ஒழுகவிட்டு
கவித எழுத  கேட்டவளே...

ண்ணெதிரே ஒருகவித  கண்ண கண்ண சிமிட்ட,
கண்ணே ஒரு கவித காசுக்கும் எழுதமாட்டேன்....னு அவன் சொல்ல
கண்ண கைகொண்டு கட்டிவிட்டு கவி கேட்டு அவள் நிற்க.

ந்த இருட்டு விழி இப்போ குருட்டு விழியடி
விரலுக்கு விழி பொருத்தி வீணையாய்  உனை  மாற்றி
கவி மீட்ட கரைகிறேன் கேளடி என்றான்....

தொடரும்...







Wednesday, April 6, 2011

அவள் ஒரு(த்தி)தீ!!...




ற்றைத்  திங்கள்  பெண்ணொருத்தி

அழகாய்  பேசும்  கண்  பொருத்தி

கன்னக்  குழியில்  தேன்  நிறுத்தி

கற்றை  கூந்தல்  மாருடுத்தி

பட்டை  குழல்  'நா'  துருத்தி

பால்  குடிக்கும்  இதழ்  திருத்தி

வலக்கை  நிறைய  வளை  உடுத்தி

வைகை  நதி  இடை  வருத்தி

வழுக்குமர  கால்  துரத்தி  

வயல்  தவழும்  பாதம்  அழுத்தி

இருள்  விரட்டும்  அவள்  ஒரு  தீ!!

இம்சிக்கும் அவள் இனம்  பருத்தி

அவளைக்  காணும்  கணம்  சாந்தி

அவளைக்  கலந்தால்  உயிர்  முக்தி!!!





Tuesday, March 8, 2011

அ(வை)வர்களும்...




குப்பைகளை வெளியே துப்பி விட்டு
சுத்தமாய் ஒரு குப்பைத் தொட்டி;

சாணம் பூசிக்கொண்டு சலவை கூட  செய்ய முடியாத 
கரை படிந்த கணினி பெட்டி;

வியனின் விரல்களை ருசித்து
உதட்டு சாயம் பூசிய ராட்சச ஓவியம்;

ங்கம் பூசிய
சாராயக் கோப்பைகளை ருசித்துவிட்டு
சமைய துறவிகளின் சாட்சி பரிமாற்றம்;

ன்னல்கள் இல்லாத வீட்டில்
சல்லடையாய் துளைத்த மேற்கூரை;

தோ ஒரு  மூலையில் 
மூத்தக்குடிகளின் 
முற்றத்துக் குடித்தனம்;

மூளைச் சலவை செய்யப்பட்டு
முழுதாய் படித்த
முதல் மதிப்பெண் பாவை;

ள் புகமுடியாத குடுவைக்குள்
அமிழ்ந்தே கிடக்கிறது
அவனுக்கு சேரவேண்டிய
அன்றைய கூலி.








Monday, February 28, 2011

அம்மா கவித...


அம்மாவ பத்தி
ஆயிரம் கவித
யாராரோ எழுதினாலும்
அந்த ஆண்டவன்
எனக்காக எழுதித்தந்த
அழகிய கவித
அம்மா நீதானே...

( அம்மா ஞாபகம்  )

 



Sunday, February 20, 2011

பட்டிக்காட்டு கவிதை...


ருத சந்தையில 
மல்லிகப்பூ மந்தையில 
மலராத மல்லி பார்த்து 
அள்ளிவந்து அத முடிஞ்சு 
மண்டையில தடமெடுத்து 
கொண்டையில இடம் கொடுத்து 
மணக்கும் மல்லிகைய 
மாமன் இவன் சூட்டிவிட 
அன்னாந்து முகம் பார்த்து 
ஆசை மொழி சொன்னவளே 

ன் அங்கமெல்லாம் அடகுவச்சா 
தங்கமெல்லாம் செல்லாது 
அடகு வங்குனவன் ஆயிசும் குறையாது.
உன் அழகையெல்லாம் எழுதிவைக்க 
அந்த ஆகாயம் பத்தாது 
ஆனவரை எழுதி இருக்கேன் 
ஆசையா படிச்சுக்கடி...

ருகருன்னு வளர்ந்த முடி
நெடு நெடுன்னு நீண்ட முடி
காத்தோடு கையசச்சு
காதோரம் சுருண்டுவந்து
நெத்தியில நெளிவு சுழிவா
கவிஎழுதும் கன்னி முடி.
மாயமோ மந்திரமோ செஞ்சு
மாலையில் மல்லிகையா
மலரும் முடி
நெருப்பா நீ விலகி நின்னாலும் காத்துல
கருப்பா நீந்திவந்து நெருங்கி வரச் சொல்லுதடி.

றுக்கிவச்ச நெலாத்துண்டு நெத்தியோ 
உருக்கிவைக்கும் கொடைவெப்பத்தை 
வியர்வையா வெளியில் விட்டு 
முத்து முத்தா பூத்து மொரச்சு என்னை பார்க்குதடி.

சுருங்கி விரிஞ்சு ஏறி இறங்கி 
புரியாத மொழி பேசும் புருவமொ 
புத்தி செத்த பித்தனாய் 
புலனடக்கி போகுதடி.

யிரைமீனு அலையும்
அல்லி குளத்துக்குள்ள
வைரமீனா கண்டெடுத்த
கண்ணுரெண்டும்
உயிரை மீனா தரையில்
தள்ளி தத்தளிக்க வைக்குதடி.

முன்னாடி நான் வந்து
முட்டி உன்ன நிக்கயில 
மூக்குன்னு பெருவச்ச 
இரெட்டைகுழல் துப்பாக்கி 
மூச்சு தோட்டாவால் 
முத்தம் சுட்டு வைக்குதடி.

ட்டாம ஒட்டி நிக்கும் உதடு ரெண்டும் 
சுத்தாம சுத்திவரும் சூரியனா 
சுருக்குன்னு சுட்டு வச்சு
சும்மா இருக்கும் இளம்வயச
நறுக்குன்னு நாலு முத்தம் 
’இச்’ சுன்னு இட்டுவைக்க 
இளமனசின் இச்சைய துண்டுதடி.

டவாயி கன்னம் ரெண்டும்
காலியா கெடக்குதடி 
கண்ணக் கொஞ்சம் மூடிக்கடி 
கடனா ரெண்டு முத்தம் 
கடைசியா கொடுத்துபுட்டு 
கவிதைய முடிக்கிறேண்டி.

பாதையில போகும் போது 
பார்த்துக் கொஞ்சம் போயெண்டி 
பாதிவரை நான் படிச்ச என் 
பட்டிக்காட்டு கவிதையே.








Friday, January 28, 2011

இன்னும் மறக்கலடி...


மறந்துவிடச் சொல்லிவிட்டு
மருகி மருகிப் போறவளே!!
சத்தியமா! உன்னமட்டும்
சாகும் வரை மறக்கமாட்டேன்
சந்தேகம் ஏதுமுன்னா
சாமிகிட்ட கேட்டுப் பாரு.

பால்வாடி நீ படிக்க - உன்
பைக்கட்ட நான் தூக்கி
பத்திரமா விட்டு வந்த
பகல் பொழுது மறக்கலடி!!!

சித்திரை பொருட்க்காச்சியில்
சின்ன சின்ன சொப்பு கேட்டு உங்கம்மா
சேலைய இழுத்துகிட்டு நீ நிக்க
சீக்கிரமா ஓடிப்போயி
சேர்த்துவச்ச சில்லறையில் நீ
பார்த்து வச்ச சொப்பு வாங்கி பரிசா தந்த
சுக நிமிஷம் மறக்கலடி.

ஒரு மணி வாடகைக்கு
ஒத்தரூவா சைக்கிள் எடுத்து
பக்குவமா உன்னவச்சு
ஓட்ட பழக்கிவிட்ட
ஒரு மணியும் மறக்கலடி.

ஓடி விளையாட உன்
ஒருகாலு சுளுக்கிவிட
உசுரே போறதுபோல்
ஓயாம நீ அழுக
அழுங்காம தூக்கிவந்து
அப்படியே வீடு சேர்த்த
அந்த நொடியும் மறக்கலடி.

சந்தைக்கு போகையில
சரஞ்சரமா வார்தவீசி
சங்கீதமா நீ பேச
சாக்கு பைக்குள்ள
சத்தமில்லாம நான்
சேர்த்த வார்த்த கூட மறக்கலடி.

என் ஒரு விரல நீ பிடிச்சு
ஊரெல்லாம் ரவுண்டடிச்சு
ஓயாம கத பேசி
கடந்துவந்த தெருவெல்லாம்
கடைசி வரை மறக்கலடி.

முடியாம நான் கெடக்க
தனியாக நீ வந்து
முல்லைப்பூ கையால
தகதகன்னு தடவி விட்ட
தைல விரலோட
தடம் இன்னும் மறக்கலடி.

உன் கையால் சோறாக்கி
உன் வீட்டு மாடியில
ஊருக்கு தெரியாம
ஒன்னா உட்கார்ந்து
ஊட்டிவிட்ட நிலாச் சோறின்
நிறமின்னும் மறக்கலடி.

உசுரோடு உறஞ்சுபோன
உன்னோட நெனப்ப மட்டும்
ஒவ்வொன்னா நெனச்சு பார்க்க
ஒரு சென்மம் பத்தாது
உடனே மறக்கச் சொன்னா
உசுர் மட்டும் ஒட்டாது...











Tuesday, January 4, 2011

ஃபர்தா தேவதை...



இதோ!!
பர்தாவில் பவணி வருகிறாள் - என்
பருவதேசத்து பெ(ங்)ண்குயின்
கலர்களுக்கு நடுவே
ஜெராக்ஸ் எடுத்த
ஜென்ம வானமாய்
இன்றும் இரவு உடுத்தியே வருகிறாள்;


நெருப்பாய் கொதிக்கும்
நெடுநீள பாதையிலே
கருப்பாய் உடுத்தி கடந்தேன்னை போகிறாள்.


ஜல்லிக்கட்டு காளையாய்
மல்லுக்கட்டும் என் மனதை
கன்னுகுட்டி கண்காட்டி
கவர்ந்தேன்னை போகிறாள்.


காலங்காலமாய் கேட்ட தேவதை
கதைகளை பொய்யாக்கி
கருப்பு சிறகு விரித்து
(பர்தாவில்) பறந்து போகிறாள்.


போதி புத்தனாய் இருந்தவனை
அத்தர் வாசனையில்
பாதி நேர பித்தனாய்
அலையவிட்டு போகிறாள்.


ஏ!!பெண்னே உன்னை மட்டும்
ஒழித்துக்கொள்ளத்தானே இந்த பர்தா
பிறகு ஏன்??
பார்கும்போதேல்லாம் என்னையும்
இழுத்து எங்கோ ஒழித்துவைக்கிறாய்.


சுர்மா தீட்டிய உன்
சுடர் விழிகளை கொஞ்சம்
சும்மா இருக்கச்சொல்
ராத்திரி வானின் எரி நட்ச்சதிரமாய்
எதிர்படும்போதேல்லாம் என்னை
எரித்துவிட பார்க்குது.


ஓ!!
உலகுக்கு ஒரு சூரியன்
போதும் என்றுதான்
முகத்தை மறைத்து முக்காடு
போட்டு வருகிறாயோ!!


சீஸர் ரத்தம் சிந்திய இடத்தில்
சிவப்பாய் பூக்கும் ரோஜா என்ற
உமர்கயாமின் உவமை விளக்க
எத்தனை சீஸர்களின் ரத்தம் வாங்கி
இத்தனை சிவப்பாய் பூத்திருக்கு உன்
செவ்விதழ்!!!


உன் மருதானி பூசிய மந்திரக்
கைகள் காற்றில் கவிதை பாடி
எனக்கே என்னை மறக்கக் கேட்கிறது.


என் கனவுகளை கலர்மாற்றிட
ஒரு துண்டு வானவில்லோடு
கருப்பு வானில் கலர் நிலவாய் வந்தவளே
உன் வருகைக்காகத்தான் காத்திருந்தது
இந்த இதயம்!
 வா!!என் வாழ்வையும் வண்ணமாக்கு..












Related Posts with Thumbnails