அற்றைத் திங்கள் பெண்ணொருத்தி
அழகாய் பேசும் கண் பொருத்தி
கன்னக் குழியில் தேன் நிறுத்தி
கற்றை கூந்தல் மாருடுத்தி
பட்டை குழல் 'நா' துருத்தி
பால் குடிக்கும் இதழ் திருத்தி
வலக்கை நிறைய வளை உடுத்தி
வைகை நதி இடை வருத்தி
வழுக்குமர கால் துரத்தி
வயல் தவழும் பாதம் அழுத்தி
இருள் விரட்டும் அவள் ஒரு தீ!!
இம்சிக்கும் அவள் இனம் பருத்தி
அவளைக் காணும் கணம் சாந்தி
அவளைக் கலந்தால் உயிர் முக்தி!!!