Tuesday, October 27, 2009

தேவதை திருமகள் இவள்...

இன்னும் சிறகுகள் முளைக்காத
சின்ன தேவதை இவள்...


சிரிக்கிரளா இல்லை சீக்கிரம் வரச்சொல்லி
அழைகிறளா புரிய வில்லை...


இவள் சிரிக்கையில் கொஞ்சம்
சிலிர்த்து கொள்கிறது சிம்பொனி...


மனதை மயக்கி
மல்லிகை கைக்குள்
மடக்கி பிடித்திருக்கும்
மாயக்காரி இவள்...

இதுவரை மண் பார்த்து இருந்த நிலவு
இன்று வின் பார்த்து கிடப்பதை வியக்கிறேன்....


தங்க சங்கிலி அணிந்து ஜொலிக்கும்
கோகினூர் வைரம் இவளோ...


யார்?? சொன்னது தேவதை வெள்ளை
உடையில் தான் இருக்க வேண்டும் என்று...!!


தரை தவழ துடிக்கும் தங்க தாரகை இவள்;
இவள் தவழ்ந்த இடங்களில்
குடி இருக்கிறாள் இன்னொரு தேவதை...(அம்மா)


இவளின் பட்டு பாதங்கள்
தரை தொடும்
தருணத்திற்காய்
தவம் இருக்கிறாள் பூமித்தாய் .....


அழும் போதுகூட
ஆயிரம் ஆயிரம்
அழகு காட்டும் அன்னம் இவள்...

வானம் கொண்ட மேகங்கள் தான் இவளின்
வண்ணம் கொண்ட கண்ணங்களோ...

மீன் குட்டி கண்ணடிக்க;
தேன் குட்டி இதழ் குடிக்க;
மான் குட்டி இடை தவழும்;
தேவதையை தரிசிக்கும் நாளுக்காய்
தவம் கிடக்கிறேன் நான்...


தேவதை திருமகள் இவள்...

No comments:

Related Posts with Thumbnails