Wednesday, February 24, 2010

இது காதல் கடிதம் அல்ல...(2)


கடந்த கவிதை கடிதத்தை கசக்கி 
காயபடுத்தாமல் கயல்விழி வழியே கவர்ந்து
இதய துடிப்போடு இணைத்திருப்பாய்  என நம்புகிறேன்.
இனி ....

அது காற்று மழை வாசம் பூசிக்கொண்டு
குறைந்த பச்ச குளிர் விற்ற காலம்.


காலையில் பறித்த மல்லிகை - பூ;
மாலை வரை மாறிவிடாமல் இருக்க பூக்காரி
அடிக்கடி அள்ளி தெளிக்கும் தண்ணீராய்
வெறும் சாரலை மட்டும்
சமைத்து கொண்டிருந்தது வானம்.


கல்லூரியில் கணித பாடம் கடினமோ என்னவோ
கல்லுரி வாசல் விட்டு வருகிறதொரு
வாடா  மல்லி வாடிய முகத்தோடு.


கவிதைக்காக காத்திருந்த காகிதம் போல் - உன்
வருகைக்காக காத்திருந்த வான் மகன்
வரி வரியாய்  எழுதுகிறான் மழை துளி மை கொண்டு
மங்கை இவள் முகம் கண்டு.


மழைத்துளிகள் உன்னை பங்கு போட்டு கொண்டன.
சில துளிகள் உன்னை தரிசித்த
தருனத்தொடு தரையில் விழுந்து
தற்கொலை செய்து  கொண்டன.


சில உன் சுவாசம் தீண்டி
சுகம் பெற்றன.


சில கார்குழல் கவ்வி
கடந்து போயின.


சில தாங்க அங்கமெல்லாம் தவழ்ந்து
சுடிதார் துணியில் இடம் பிடித்து இறந்து போயின.


உன் சுடிதார் வரைந்த மொட்டுக்கள் எல்லாம்
பொசுக்கென பூத்துவிட நீ மட்டு மார்பில் தவழ்ந்த
மயில் நிற துப்பட்டாவில் மறைந்து கொண்டாய்.


பூமியில் பூத்த பூவொன்று புத்திமாறி மொட்டாய்
 முகம் மூடிய அதிசயம் அங்கு அரங்கேறியது.


வேகமாய் ஓடிவந்து பூமி பெண் விசாலமாய்
விரித்து பிடித்திருந்த ஒரு மர குடைக்குள்
மருகி குறுகி நின்று கொண்டாய்.


ஓடி ஒழிந்தது நிலவோ என்று வானில் மின்னல் வெட்டி
தொலைந்து போன நிலவை மின்னல் டார்ச் அடித்து
தேடி தேடி வானம்  கிழித்து  போனது மின்னல்.

மீண்டும் மலர்ந்தது உன் மலர் முகம்.


பனி நனைத்த ரோஜாவில்  பனியை மட்டும்
கடத்தி போகும் காற்றாய் ஒரு
கருப்பு நிற கைகுட்டையால் மழை துளிகளை
மறைத்துவிட்டாய்.


காதலை காட்டிகொடுக்கவே படைக்க பட்ட
தோழமை தொண்டர்களில் உன்
தோழியும் ஒருத்தி போல
உன்னை மட்டும் வாசித்துகொண்டிருந்த
என்னை படித்து உன் காதில் ஏதோ ஒப்பித்து
ஒழிந்து கொண்டால்.


காற்றில் ஆடிய நாணல் நிதானமாய்
நிலைகொள்வதுபோல் நீயும்  விழி  நிறுத்தி
மொழி மாற்றி ஒரு பார்வை பகிர்ந்தாய்.
ஒரு நீல மின்னல் நீண்டுவந்து இதயம் இடித்து போனது.


இதயத்தில் படபடத்த பட்டாம்பூச்சி
இப்போது இமைகளையும் பற்றி கொண்டது.


வழி குழிஎல்லாம் மழை துளி நிரப்ப மனமோ
உன் மனகுழி தேடி நிரம்பி வழிந்தது.


தொண்டர்களுக்கு நடுவே சில
குண்டர்களும் இருப்பார்கள் தானே - உன்
இன்னொரு தோழி ஒருத்தி குடையோடு வந்து
குடைக்குள் வரச்சொல்லி வாதாடினாள்.


நீ குதித்து ஓடி குடைக்குள் நுழைகையில்
குடைக்கம்பி ஒன்று உன்னை செல்லமாய்
குட்டி வைத்து வராதே என்றது.


நீ குடையை  கோபித்து கொண்டு முகம் சுழிக்கயில்
குழர்கற்று ஒன்று சுழன்று அடித்து  உன்
கார்குழல் இரண்டை கடன் வாங்கி போனது.

கொஞ்ச நேரத்தில் உன்னை குட்டிவிட்ட
குற்றத்திற்காய் எட்டு கண்களிலும்
சொட்டு சொட்டாய் ஈரம் வைத்து கொண்டது  குடை.

பணி முடிந்ததும் பத்திரமாய் கூடு சேரும்
குருவிபோல் குடைக்குள் கூடி குடி போனாய்.

கடத்த பட்டது என் இதயம்.


நம்மை சுற்றி வானவில் வளையம் போட்டு
காதல்  அதில்  ஊஞ்சல் கட்டி ஆடியது...(தொடரும்...)                                                            

12 comments:

தமிழ் உதயம் said...

கவிதையின் நீளத்தை குறைத்தால், கவிதையின் நேர்மை சட்டென்று இதயத்தை கவரும்.

சீமான்கனி said...

வாங்க ரமேஷ் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...அவளுடைய ஒவ்வொரு அசைவையும் அவன் நேசிப்பதாக காட்டத்தான் இந்த நீளம்..இனி நீளத்தை குறைக்க முயற்சிக்கிறேன்...

பனித்துளி சங்கர் said...

உணர்வுகளை அழகாக கசியவிட்டு இருக்கீங்க . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

Prapa said...

உங்கள் பட்டறையில் பயிற்சி வகுப்புக்கள் ஏதாவது கிடைக்குமா ??

ஸாதிகா said...

//
கல்லூரியில் கணித பாடம் கடினமோ என்னவோ
கல்லுரி வாசல் விட்டு வருகிறதொரு
வாட மல்லி வாடிய முகத்தோடு.// தேறிட்டீங்க சீமான் கனி.//உங்கள் பட்டறையில் பயிற்சி வகுப்புக்கள் ஏதாவது கிடைக்குமா ??// பிரபாவின் பின்னூட்ட வரிகள் உங்களுக்கு கிடைத்த பெரிய விருது.வாழ்த்துக்கள்!!

நிலாமதி said...

அருவியாய் பெருக்கெடுக்கிறது கவி வளம். சற்று நீளத்தை குறைத்தால் இன்னும் நன்று..........
எனக்கும் உங்கள் பயிற்சிப் பட்டறையில் ஒரு இடம் ஒதுக்கும்படி பணிவாய்.....

சீமான்கனி said...

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
உணர்வுகளை அழகாக கசியவிட்டு இருக்கீங்க . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

வாங்க பனித்துளி சங்கர் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனி இணைந்திருப்போம்...

சீமான்கனி said...

பிரபா said...
//உங்கள் பட்டறையில் பயிற்சி வகுப்புக்கள் ஏதாவது கிடைக்குமா ??//

வாங்க பிரபா...ஆசிரியர் அளவுக்கு நானே இன்னும் தயார் ஆகவில்லை பிரபா...நான் இன்னும் சின்னபுள்ளே (மாணவன்தான்...)
உங்கள் அன்புக்கும் ,வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி....பிரபா...

சீமான்கனி said...

ஸாதிகா said...
//
கல்லூரியில் கணித பாடம் கடினமோ என்னவோ
கல்லுரி வாசல் விட்டு வருகிறதொரு
வாட மல்லி வாடிய முகத்தோடு.// //தேறிட்டீங்க சீமான் கனி.//

ஆமாவா...

//உங்கள் பட்டறையில் பயிற்சி வகுப்புக்கள் ஏதாவது கிடைக்குமா ??// பிரபாவின் பின்னூட்ட வரிகள் உங்களுக்கு கிடைத்த பெரிய விருது.வாழ்த்துக்கள்!!

ஆமா அக்கா...
உங்கள் அனைவரின் பின்னூட்டமும் எனக்கு அப்படிதான்...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா...

சீமான்கனி said...

நிலாமதி said...
//அருவியாய் பெருக்கெடுக்கிறது கவி வளம்.//

வாங்க அக்கா நலமா???ஆமாவா கா
//சற்று நீளத்தை குறைத்தால் இன்னும் நன்று..........//
இனி முயற்சிக்கிறேன்.....

எனக்கும் உங்கள் பயிற்சிப் பட்டறையில் ஒரு இடம் ஒதுக்கும்படி பணிவாய்.....//

உங்களுக்கு இல்லாமலா...??? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா...

Priya said...

என்ன சொல்வதுன்னே தெரியல, அழகான கவிதையா... அருமையான க‌விதையா....?! ஒவ்வொரு வ‌ரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது!
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களின் இந்த கவிதை!

சீமான்கனி said...

Priya said...
//என்ன சொல்வதுன்னே தெரியல, அழகான கவிதையா... அருமையான க‌விதையா....?! ஒவ்வொரு வ‌ரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது!
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களின் இந்த கவிதை!//

நன்றி பிரியா அன்புக்கும்..வருகைக்கும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கும்...

Related Posts with Thumbnails