Wednesday, February 3, 2010

விட்டு...விட்டு...விட்டு...

கனவு  சுமந்த காகிதம் விட்டு
காற்றை சுமந்த தேகம் விட்டு
காதல் சுமந்த மோகம் விட்டு .
கண்ணிர்  சுமந்த சோகம் விட்டு
கருமை சுமந்த காகம் விட்டு .
இளமை சுமந்த வேகம் விட்டு.
இசையை சுமந்த ராகம் விட்டு
விரகம் சுமந்த தாகம் விட்டு.
வயலை சுமந்த போகம் விட்டு
தண்ணீர் சுமந்த மேகம் விட்டு .
நஞ்சு சுமந்த நாகம் விட்டு
ரத்தம் சுமந்த ரணம் விட்டு
மொத்தம் சுமந்த பணம் விட்டு


வஞ்சகனின் மணம் விட்டு
வரி புலின் வனம் விட்டு
குடிசையின் ஓலம் விட்டு
குயிலின் கானம் விட்டு
தங்கத்தின் தனம் விட்டு
தள்ளாடும்  பானம் விட்டு
தெரு நெடுக சாணம் விட்டு
திக்கு தெரியா வானம் விட்டு
தேடி அலைந்த பூனம் விட்டு
தேடாத நாணம் வீட்டு
தெரியாத மானம் விட்டு
திகட்டாத தேன் விட்டு
தெவிட்டாத  மழலை விட்டு
தாளாத துயரம் விட்டு
தணியாத கோபம் விட்டு
அர்த்தம் தராத பாட்டை விட்டு
ரத்தம் சொட்டும் செய்தி விட்டு
முத்தம் சொட்டும் காதல் விட்டு.
சிரிப்பை  தராத சீரியல் விட்டு
வாசம் தராத வண்ணம் விட்டு.
நேசம் தராத உறவை விட்டு
பாசம் தராத பிரிவை விட்டு
தேசம் தராத தியாகம் விட்டு
யாசம் தராத நினைவை விட்டு
பாவம் பறந்து போனது பாமரனின் ஆவி...

15 comments:

ஸாதிகா said...

த்சோ..த்சோ..டச்சிங் கவிதை

சீமான்கனி said...

வாங்க அக்கா உங்கள் எக்ஸ்பிரஸ் பினூட்டதிற்க்கு நன்றி...

Unknown said...

விட்டு போக மன இல்லாமல் இருக்கிறது

சீமான்கனி said...

வாங்க சங்கர் முதல்முறையாய் வந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...இனி இனைந்திருபோம்....

தமிழ் உதயம் said...

மொத்த வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை வேஷ்டி மூடிய உருவத்தின் மூலம் கவிதை சொல்கிறது

சீமான்கனி said...

வாங்க தமிழ்...அழகு கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

க.பாலாசி said...

நல்ல கவிதை...நண்பரே... படமும் பொருத்தம்...

நிலாமதி said...

எல்லாம் விட்டு இந்த கூடு ஒரு நாள் போய் விடும்.
படமும் கவிதையும் உணரவைக்கிறது. நல்ல கற்பனை வளம்

சீமான்கனி said...

க.பாலாசி said...
//நல்ல கவிதை...நண்பரே... படமும் பொருத்தம்..//
வாங்க பாலாசி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

நிலாமதி said...
//எல்லாம் விட்டு இந்த கூடு ஒரு நாள் போய் விடும்.
படமும் கவிதையும் உணரவைக்கிறது. நல்ல கற்பனை வளம்//

வாங்க...அக்கா உன்மைதான்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....அக்கா...

மதுரை சரவணன் said...

vittu vittu thottu thottu manam pattu pattu unngka blogga vittu vittu poka manan kututhu illeye .

சீமான்கனி said...

வாங்க மதுரை சரவனன்...உங்கள் வருகைக்கும் அன்புக்கும் நன்றி....இனி இனைந்திருப்போம்...

ப்ரியமுடன் வசந்த் said...

படத்துக்கப்புறம் கவிதைக்குள்ள போக போக ம் வருத்தம் மட்டுமே...

:(

சீமான்கனி said...

வா மாப்பி... வருகைக்கும் கருத்துக்கும் உணர்வுகள் பகிர்ந்து கொண்டதிற்க்கும்
நன்றி மாப்ளே...

Priya said...

படித்த பின்பும் மனம் இக்கவிதையை "விட்டு" வர மறுக்கிறது.
அழகா எழுதி இருக்கீங்க‌

சீமான்கனி said...

வாங்க பிரியா...விட்டு போகாமல் இங்கே இருப்பதிற்கு நன்றி...தோழி...

Related Posts with Thumbnails