Saturday, November 14, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(6)


நமக்கான அதே மாலை பொழுது என் விரல் உன்னை தொட்டதும் சிலிர்த்து விட்டு சினுங்கலாய் கேட்டாய்....தொட்டு கொள்ளமால் இருக்க முடியாதா உன்னால்?


அடி என்னவளே இயற்கையை மீறி எதுவும் பண்ணமுடியாது நம்மால்...
ஒ...அப்டினா...இது இயற்கையா!!??? பொய்...வனமும்,பூமயும் இயற்கைதானே...பிறகு என் அவைகள் தொட்டு கொள்வதில்லை?? அடி லூசு பெண்ணே நாமாவது பரவாஇல்லை அவர்களின் தொடக்கமே தொட்டு கொள்வதில்தான் ஆரம்பிக்கிறது,.



காலை பொழுதின் கதிரவன் கரம் கொண்டு தொட்ட பின்தானே பூமி பெண்ணே கண்விழிகிறாள்...ஒ...அப்டியா!!!?...அப்றம்...



மாலை கடற்கரையில் செவ்விதழ் குவித்து சிவப்பு முத்தம் பெற்ற பின் தானே அந்தி சாய்கிறாள் பூமி பெண் .
மழை எனும் மேன்தொடுகை கொண்டுதானே பூமி பெண்ணே பூப்படைகிறாள்...
இரவில் நிலவின் ஸ்பரிசம் தொட்டுதனே பூமி பெண்ணே துயில் கொள்கிறாள்.
தொட்டு கொள்ளாமல் காதல்,காமம்,இயற்கை எதுவுமே இல்ல புரிந்ததா???ம்ம்...அதற்க்கு என்ன சாட்சி என்றாய்...அடி மக்கு பெண்ணே அதற்குதான் நம்மை படைத்து இருக்கிறதே இயற்கை.



பின் ஏதோ ரகசியம் சொல்வது போல் காதருகே வந்து தித்திக்கும் தீடிர் திருட்டு முத்தம் தந்து விடை பெற்றாய்…



நானும் விடைபெறும் சமையம் வந்தது வாழ்க்கை என்னையும் அதான் வசத்துக்கு கொண்டுவந்த தருணங்கள்...



வேலையின் நிமிர்த்தமாய் வெகுதூர பயணம்.உன் நினைவுகளை மட்டும் துணைக்கு கூட்டிக்கொண்டு பறந்து போனேன்.நம் பேச்சு செல் போன் உரையாடலாய் மாறி...பின் வந்த நாட்களில் ஸ்.எம்.ஸ்-சாய் சுருங்கி போனது.அடுத்தடுத்த நட்களில் உன் குறுஞ்சி பேச்சில் மௌவ்னம் மட்டுமே மிச்சமாய் இருந்தது, எனக்கு புரியவில்லை...பின்னொரு நாளில் உன் அம்மாவிடம் பேசும்போது உன் திருமண தகவல் தந்து போனார்.உன்னை மட்டும் இல்லை உன் சொந்தங்களையும் நேசிப்பதால் என்னிடமும் மௌவ்னம் மட்டுமே மிச்சமாய் இருந்தது.



அதன் பின் நகர்ந்த அந்த நரக நாட்களை எழுதக்கூட விரும்ப வில்லை.உன்னோடு பேச துடித்த முயற்சிகளில் தோல்வி மட்டுமே கிடைத்தது எனக்கு.



எனக்கும் அழைப்பு வந்தது உன் அண்ணனின் பேச்சு என்னால் மறுப்பு கூற முடிய வில்லை.நீ என்னவளாய் இருக்கபோகும் அந்த கடைசி நாட்களுக்காய் தயாரானேன்…



ஊர்வந்து இறங்கிய பொது ஊரடங்கு உத்தரவிட்டு இருந்தது போல் எங்கு பார்த்தாலும் ஒரே வெறுமை. கவிதை இல்லாத வேற்று காகிதம் போல் உன் கோலம் இல்லாத வீட்டு முற்றம். இவ்வளவு நாள் சொர்க்கமாய் தெரிந்த உன் வீடு இன்று நரக வீடு, வரவேற்க்க காத்திருந்தது...



நீ மட்டும் உன் மௌவ்னத்தின் ஒவ்வொரு வார்த்தையாய் மொழி பெயர்த்து பார்வையால் பகிர்ந்து கொண்டிருந்தாய் என்னிடம்... உன் கண்ணில் நீர் படலம் ஏதும் இல்லை இரவெல்லாம் அழுதிருக்கிறாய் , திர்திருக்கும் அதை வீட பெரிதாய் என்ன செய்து விட முடியும் அப்போது. ஓடிபோவதிலும், உயிர் விடுவதிலும் அப்படி ஒரு உடன்பாடு இருந்ததில்லை இருவருக்கும்.



அன்று… உன் வீட்டு குளியல் அறையில் நானும் ஷவரும் அழுதே ஓய்ந்து போனோம்.எனக்காய் வைத்திருந்த பார்வை ஒவ்வொன்றாய் பரிசளித்த வண்ணம் நீ இருக்க, இவள் முகத்தில் கல்யாண கலை வந்து விட்டதாக யாரோ சொல்லி என்னை கடந்து போனார்கள். உன் அண்ணனின் நண்பன் என்பதால் என்னையும் உன் திருமண வேலைகளில் இணைத்து கொண்டேன்.



இனிதே முடிந்தது உன் திருமணம். ஒரே புள்ளியில் இருந்து வெவேறு திசையில் பிருந்து போனோம்.சில நாட்கள் பேசிக்கொள்ள சில தருணங்கள் கிடைத்தது. பினொரு நாளில் தான் உதிர்த்தாய் உன்னிடம் மிச்சம் இருந்த அந்த வார்த்தையும்... உன்னோடு பேசும் பொது அவருக்கு துரோகம் செய்வதாய் உணர்கிறேன் என்றாய் அப்போதுதான் உணர்ந்தேன் நீ…. நினைவுகளை (என்னை) விட்டு வெகுதூரம் பொய்விட்டதை... நானும் உன் நினைவுகளை உன்னோடு சேரும்படி அனுப்பி வைத்தேன். உன்னை தேடி கிடைக்காமல் அவைகள் மீண்டும் என்னோடு வந்து சேர்ந்து விட்டன.இன்று குறை ஒன்றும் இல்லாமல் நானும் உன் நினைவுகளும் நலமாய் தான் இருக்கிறோம்...(உன் நினைவுகள்,நான் மற்றும் நமக்கான வானம்...) 

5 comments:

kishore said...

super

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

சீமான்கனி said...

//KISHORE said...
super//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிஷோர் ...

//TamilNenjam said...
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்//

உங்களுக்கும் வாழ்த்துகள் அண்ணே...தொடர்ந்து வந்து ஆதரவு தரவும்....நன்றி...

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..தோல்வியும் சுகமாத்தான் இருக்குல்ல சீமாங்கனி...

சீமான்கனி said...

ம்ம்ம்...அது ஒரு தனி சுகம் தான் வசந்த்....உங்கள் தொடர் வருகைக்குக் உற்சாகத்திற்கும் நன்றி வசந்த்.....

Related Posts with Thumbnails