Sunday, September 20, 2009

மீண்டும் வருவேன்.....

கொஞ்சம் வேலையின் நிமிர்த்தமாய் ஒரு சிறு பிரிவு .. விரைவில்
மீண்டும் வருவேன்....
அனைவரின் அன்புக்கும் ...நன்றி......
அன்போடு
சீமான்கனி...

Monday, September 7, 2009

சபலம்...அம்பலம்...

அது ஒரு பெரிய பெயர் போன நிறுவனம். அங்க ரவிதான் எல்லாமே.பாஸ் சரியா வர்றது இல்ல அவருக்கு ஏகப்பட்ட பிசினுஸ் . சோ இப்போ கிட்டதட்ட எல்லாமே ரவிதான்.

ரவிக்கு ஒரு அழகான மனைவி ஒரு பெண் குழந்தை.மனைவி ரெம்ப அன்பானவள்.கணவன் என்றல் கொள்ள பிரியம் கணவனுக்காகவே அம்மா அப்பா யாரும் வேண்ண்டாம் என்று ரவியை நம்பி வந்தவள்.ர
வியும் சந்தோசமாகத்தான் வச்சுஇருக்கான் .

அதே நிறுவனத்தில் ரவிக்கு கிழே பத்மா வும் வேலை செய்கிறாள்.
கணவனை பிரிந்து வாழ்பவள் .குழந்தை ஏதும் இல்லை. கல்ல்யனமே வேண்டாம் இப்படியே இருந்து விடுகிறேன் என்ற பிடிவதகாரி.
ரவிக்கு இவள் மேல் ஒரு சின்ன சபலம். எப்படி
யும் இவளை நம்ம வழிக்கு கொண்டுவந்துவிட போராடி காய் நகர்த்துகிறான் . அவள் மசிவதாய் தெரியவில்லை . 
கடைசியில் தன் மனைவி நடத்தை கேட்டவள்,அப்படி இப்படி என்று கதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பத்மாவை தன் வழிக்கு இழுத்துகொண்டிருக்கிறான்.
பத்மாவும் மனசு மாறுகிறாள்.

ஒருநாள் ரவிக்கு இன்னபா அதிர்ச்சி தருகிறாள். இன்று வீட்டில் யாரும் இல்லை நீங்கள் எப்படியாவது சரியாய் 12 மணிக்கு என்வீட்டுக்குக் வந்துவிடுங்கள் என்று அரை நாள் விடுப்பு வாங்கி புறப்பட்டு போனாள். ரவிக்கு இறுப்பு கொள்ளவில்லை .மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மல்லிகையும் ஸ்வீட்டும் வாங்கி வைத்துகொண்டு. மனைவிக்கு போன் போட்டு...நான்அவசர வேலையை தாம்பரம் போவதாகவும் இரவு வரமட்டேன் என்றும் சொல்லி சமாளித்து விட்டு ,

அவள் வீட்டுக்கு ஆட்டோவில் பொய் இறங்குகிறான் மணி 12 யை தொட இன்னிம் கொஞ்ச நேரம் தான் .
ஒரு சின்ன பதட்டத்தோடு பத்மா...என்று அழைக்க....வீடு மொத்தமாய் இருண்டு கிடக்கிறது...
கரண்ட் இல்ல நீங்க நேரா.. ரூம்குள்ள வாங்க என்று அவளின் குரல் கேட்டு குதுக்கலாமாகி...மேல் சட்டையை கழட்டி விட்டு லைடேறாய் எடுத்து வெளிச்சம் பிடித்து உள்ளே...போகிறான்.
காதல் வசனம் வேறு...சரியாய் மணி ௧௨ அடித்ததும் சட்டென்று விளக்குகள் ஏறிய...ஒரு கோரஸ் குரல்...ஹாப்பி பர்த்டே டு யு ...என்று....பார்த்தால் ரவிக்கு பெரும் அதிர்ச்சி....
அனந்த நிறுவனத்தின் மொத்த ஊழியரும் ,பாஸ் உம் ,அவன் மனைவயும் ,நடுவே பத்மாவும் பர்த்டே கேக்கும் ...
இவனோ அரை நிர்வாணமாய் .
அத்தை பர்ர்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி....பதமா ஒரு சிறு புன்னகையோடு நடந்ததை விளக்குகிறாள்...
அவள் விடுப்பு வாங்கிய அந்த அரைநாள் அவள் வெளியே போவதற்கு முன் சக ஊழியர் அனைவரையும் அழைத்து பேசி இருக்கிறாள்...அதை கண்ணாடி அறைக்குள் இருந்து பார்த்த புரிந்திருக்கும் ?? பின ரவி இன் மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறாள். அவளிடம் தன் பிறந்தநாள் விழா என்றும் மற்றவரிடம் ரவி இன் பிறந்தநாள் விழா என்றும் பொய் சொல்லி இருக்கிறாள்...இப்போ பத்மாவின் வீடு...

இதை பார்த்து பித்து பிடித்தது போல் ஆன ரவி தலை தெறிக்க வெளியே....ஓடிபோனான்...
எப்படி இருக்கு பத்மாவின் ஐடியா.....
எப்படி இருக்கு கதை.....
மனசுல பட்டதை சொல்லிட்டு போங்கோ...

Friday, September 4, 2009

''மீண்டும்ஜெய் ஹோ ரஹ்மான்....''


நம்ம இசை புயலுக்கு...மீண்டு ஒரு விருது ... (கிராஸ்ரூட் கிராமி விருது )
ரஹ்மான் இசையமைத்த வரலாறு படத்துக்கும்சிறந்த இந்திய ஆல்பத்திற்கான விருது வழங்கி (2009 Just Plain Folks Music Award’ )அமெரிக்க அரசு கவுரவ படுத்திருக்கு .
,படத்தில் வரும் ''இன்னிசை அளபெடையே...'' பாட்டுக்கு.. சிறந்த பாடலுக்கான முனைவது பரிசு இந்த விருதுக்கு நம்ம இசை பிதா இலயரஜவும் ,பங்களாபேண்ட் கிராஸ்விண்ட்ஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்..

நம்ம இசை பிதா இளையராஜாவின் லைவ் இன் இத்தாலிக்கு 3வது சிறந்த இந்திய ஆல்பத்திற்கான விருதும் குடுதுருகாங்க .
Just Plain Folks Music Award’ ஒரு ஆடம்பரம் இல்லாத உலகதர விருது...
இந்த விருதுக்கு மொத்தம் நாற்பத்தி ரெண்டு ஆயிரம் (42,000)ஆல்பம் போட்டிஇடிருக்கு.
மொத்தம் ஐந்து லட்சத்தி அருபதாஇரம் (5,60,000)பட்டு. அடேஅப்பா....
மீண்டும் ஒருமுறை.....'' ஜெய் ஹோ ரஹ்மான்....''

அப்பதா சத்தியமா மொக்கை...


என் முதல் மொக்கை ...

நானும் எதாவது மொக்கை எழுதலாம்னு ரெம்ப யோசிச்சு எழுதிருக்கேன்...தப்பு இருந்தா மன்னிசுடுன்ங்க மக்கா....
மேட்டரு ஒன்னு....
நாம பரிச்சையே எழுதாம பாஸ் பண்ணற ஒரே மேட்டரு...அது தான்...
நாம எவ்வளோதான் பாஸ் பண்ணுனாலும் என்னைக்காவது ஒருநாள் நம்மளயே பெயில் பண்ணற மேட்டரும்...... அதுதான்.... (எதபத்திடா சொல்லபோரே??) இருங்க இன்னொடு மேட்டரும் இருக்குல.....
மேட்டரு ரெண்டு...
கழுத்தளவு குடிச்சாலும் ஸ்டெடியா நிக்குரவே இவே மட்டும் தான் ???!!!!!***//&&$
இவே குடிச்சத எவே குடிச்சாலும் ப்லாட்டுதான்???( ஊழபயவுல ஆட்டம் ஓவரா இருக்குதே...)

என்னடா ஏதோ முக்கியமா சொல்லவர்றானு பாக்காதிங்க!!! எங்க அப்பதா இது சத்தியமா மொக்கைதான்....(நீ சொல்லித்தான் தெரியனுமா?? மேட்டருக்கு வாடா...)வந்துடே...

மொத மேட்டரு ...நம்மளைவிட்டு வெளிய போறது....(டேய்...)

ரெண்டாவது மேட்டரு நமக்கு உள்ளே போறது...(அதா....)ஆஹா கண்டுபிடிச்சுடீக.... போல(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....) இன்னும் இல்லியா...

அப்போ நானே.....

மொத மேட்டரு பிச்ச்ச்ஸ்......(அடப்பாவி...)

அட ஆமாங்க அது ஒன்னுதனாக எக்ஸ்சம் இல்லாம பாஸ் பண்ணிடே இருக்கோம்...அனா ஒருநாள் கிட்னி பெயில் ஆகி நம்மளையே பெயில் ஆக்கிடுது ...(அட ஆமால....)(அடிங்க்கொயேயால ....)

ரெண்டாவது மேட்டரு சரக்கும் பாட்டிலும்...(டேய்...அவனா நீ......)

யோசிச்சு பாருங்க...பாட்டில் புல்லா சரக்கு இருந்தாலும் அது ஸ்டேடியாதான நிக்குது அனா அத நம்ம பயலுவ குடிச்சா நிக்க முடியுதா ...??? (அவ்வளோ நல்லவனா நீ...)

இதுல இருந்து என்ன தெறியுது .....

அந்த தண்ணியா குடிச்சா கிட்னி சீகரம் பெயில் ஆய்டும் ...(அட...பார்ர்ரா...)

கட்சியா ஒரு கடி....(இது வேறயா???)

சரக்கு அடிச்சா பிச்ச்ஸ் ...வரும் அனால் ........பிச்ச்ச்ஸ்...

(டேய்...நிறுத்துடா....அடுத்து நீ என்ன கேட்டக போறேன்னு தெரியும் மகனே கைல மாட்டுனா போழதுடுவோம்....)

ஐயையோ....விடு ஜூட் எஸ்கேப் டோய்......(இதெல்லாம் தேவையா உனக்கு...)
மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ (திட்டிட்டு...)

Wednesday, September 2, 2009

நாலு கண்ணு கொசு...

என்னடா இவன் தீடீர்னு கொசு, ஈ- லாம் ஆராய்ச்சி பண்ண அரம்பிசுட்டன்னு நெனைக்க வேண்டம் .அந்த அளவுக்குலாம் ரிஸ்க் எடுக்க தெரியாதுபா...

இதுஎன் பள்ளி பருவத்து அனுபவம்பா ....
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னோட கூட படிச்சவன்தான் நாலு கண்ணு கொசு.ரெம்ப நல்ல பையன் நல்ல படிப்பான்.அமைதியா இருப்பன்.லீவுல ஊர் சுத்தாம அவங்க அப்பாக்கு ஹெல்ப் பண்ணுவன்.அவங்க அப்பா விவசாயம் பாக்குறவரு.
சரி அந்த பெயர் மட்டேருக்கு வருவோம்..

அவனுக்கு கண்ணு ரெம்ப வீக் அதுனால கண்ணாடி போட்டு இருப்பன்.அப்போ அவன எல்லோரும் நாலு கண்ணானு கூப்டுவோம்.
இந்த கொசு பேர் வந்தது வேடிக்கையான சம்பவம்...ஒரு நாள் மணி எட்டு இருக்கும் அவங்க மாமா வீட்டுக்கு வந்துருந்தான் எங்க வீட்டுக்கும் அவங்க மாமா வீட்டுக்கும் கொஞ்ச தூரம்தான். அங்க வந்தா என் வீட்டுக்கு வராம போக மாட்டான். அப்போ நானும் அவனும் ஹையா நடத்து போயிட்டு இருந்தோம். ஏதோ காமெடி சொல்ல. சிரிச்சு வேகமா மூச்சு இழுத்தான் கொசு வாய்குள்ள உள்ளே போய்டுச்சு...கொஞ்ச நேரம் இரும்பி இரும்பி பாக்குறான் உள்ள போனது போனதுதான் வெளிய வரவே இல்லை...அன்னில இருந்து அவனுக்கு நாலு கண்ணு கொசு னு பேரு வச்சுட்டோம்.


அப்றம் அடிக்கடி வீட்டுக்கு வருவான் ரெண்டுபேரும் சேந்து தட்டான் பிடிக்க போவோம்,மாங்காய் பறிக்க, இப்டியே ஊர் சுத்துவோம் படிக்கும் போதும் ஒன்னதான் எங்க வீட்டு மாடிதான் அப்போ எங்க உலகம்....
தீடீர்னு ஒருநாள் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் விஷயம் சொல்லணும் நே...சொல்லிட்டு இருந்தான். ஒரு நாள் சொல்லியே புட்டான் ...

''நான் உங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருக்குற பானு பொண்ண லவ் பன்றேண்டானு'' .டீன் ஏஜ் ஹர்மொன்ஸ் கபடி ஆடுற வயசு .எனக்கு ஒரே அதிர்ச்சி இவனா? இப்டி பேசுறான் ???!!!! அப்போ எனக்கு தெரிஞ்சு காதல்னா பெரிய கெட்ட வார்த்தை என்னால அத ஏத்துக்கவே முடியல...

அடுத்த நாள் இருந்து அவன்கிட்ட பேசுறதே இல்லை அவன் கூடவே வந்து ''டேய் சாரி டா இனிமேன் அப்படி செய்ய மாட்டேண்டா ப்ளீஸ் என்கூட பேசுடா'' டெய்லி கெஞ்சுவான் என்னால ஜிரணிக்கவே முடியல .அவன் இதுக்க்காகதான் டெய்லி வீட்டுக்கு வந்தனா??இதுக்காகத்தான் என்கூட நண்பன பழகுனனா??நல்ல பையனாச்சே...ஏன் இப்டி மாறுனான்...அவன பாக்கும் போதெல்லாம் எனக்கு கஷ்ட்டமா இருக்கும். நான் பேசாம இருக்குறத நெனச்சு ரெம்ப கவலை பட ஆரம்பிச்சுட்டான் சரியா படிக்குறதும் இல்ல...எனக்கு மனசே கேட்ட்கல...நான் ஒரு முடிவு பண்ணுனேன் ஓகே அடுத்த வாரம் அவன்கிட்ட இனிமேல் இப்டி பண்ண மாட்டேன்னு சத்தியம் வாங்கிட்டு பழம் விட்டுடுவோம்னு ....

அடுத்த வாரம் திங்கள் அவன் ஸ்கூலுக்கே வரல...நான் வீட்டுக்கு போனா என் அம்மா ''சொல்லறங்க டேய் உன்கூடவே சுத்திட்டு இருப்பானே அந்த குமார் பையன், அவன நேத்து பாம்பு கடிசுருச்சம்டா அவங்க மாமா சொன்னாரு. நீ சைகிள எடுத்துட்டு போய் பாத்துட்டு வாடான்னு'' சொல்ல எனக்கு ஒண்ணுமே புரியல'' எப்பமா??'' ....''மத்தியானம் அவங்க மாமா சொன்னாருடா. போய் பாத்துட்டு சிக்கரம் வந்துருடா....னாங்க ... நான் வேகமா பதட்டதோட போய் பாத்தா அவங்க வீட்டு முன்னாடி ஒரே கூட்டம் .
அவங்க அப்பா என்ன பாத்ததும் புடிச்சுட்டு அழுறாரு...அவங்க அம்மா ஒரு விசும்பளோட ''தம்பி பாருடா குமார பாருடா, ரெண்டுபேரு ரெட்ட புள்ளமாறி திரிவீகலேடா. இப்போ பாருடா இவே எப்படி கேடக்கானு .....''
நான் பார்த்த முதல் மரணம்... நான் அழுத முதல் மரணம் ...நான் உணர்ந்த முதல் மரணம் ....அவன் முகத்துல ஏதோ ஒரு சோகம் தெரிஞ்சது எனக்கு மட்டும்... என்கிட்ட கடைசி வரைக்கும் பேசமட்டிண்டேல... போட நான் போறேன்னு அவன் சொல்லறமாதிரி தோனுது...
அடுத்த நாள் ஸ்கூல் லீவு விட்டுடாங்க...அனந்த சோகம் ரெம்ப நாள் என்னைவிட்டு போகவே இல்ல...
ஆம் இன்று அவனுடைய 14-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றும் அந்த வலி உணர முடிகிறது...
அவனுக்காக இந்த பதிவு....
மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ....

என் 2-ஆம் காதலி...

ஓர் அதிகாலை மணி ஆறு இருக்கும்...ஒரு அழகி, கொலுசை பேசவிட்டு அவள் மட்டும் மௌனமாய் என் படுக்கை அறைக்குள் நுழைந்து ''புஜ்ஜி என்த்ரி....புஜ்ஜி என்த்ரி....''என்று எழுப்ப....''ப்ளீஸ் டா ரெம்ப டயர்டா இருக்கு...''கொஞ்சநேரம் அமைதிக்குப்பின் என் கன்னங்களை ஈரமாகி ..முதுகில் ஏறி ஒருமுறை இறுக்க அணைத்துவிட்டு என் தலையனையில் அவளும் தலை வைத்து படுத்து கொண்டாள்... அடுப்படியில் இருந்து என் அம்மா..."அங்க யார்கிட்டடா பேசிட்டு இருக்கே..." ஐயோ!!!!.

முதல் மடியில் இருந்து அவளின் அம்மா..."எந்திச்ச ஒடனே எங்கடீ போற..சொல்ல சொல்ல எவ்ளோ தைரியமா போரபாரு ..." போச்சு... அவள் எதையும் கண்டுகொள்வது போல்தெரிய வில்லை...அப்படியே ஒருவருடம் நினைவுகள் பினோக்கி நகர்ந்து போனேன்...

அவள் பவித்ரா.அழகான பெயர் அவளும் அப்படித்தான்.. நாங்கள் புதுவீடு குடிபோய் இருக்கிறோம்.அம்மாவுக்கு படியேற கஷ்ட்டம் என்பதால் கிழ்த்தளமாய் தேடி தேர்ந்துஎடுத்த வீடு...அவளுக்கு முதல் தளம் முதல் நாள் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு என்னை வெறித்து பார்த்தால்...அருகே அவளின் பாட்டி. முதல் பார்வையிலேயே...அவளை பிடித்து போனது.அடுத்த நாள் அவளின் பாட்டி கிழே வந்து என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க அவளும் உடனிருந்தால் என்னை பார்த்தும் பாட்டி, ''உங்க பையனா??? என்ன பண்றாரு..''விசாரித்தார்.அம்மா விளக்கி சொல்ல அவள் மட்டும் என்னையே பார்த்தபடி இருந்தாள்...பாட்டிய்டம் கேட்டேன் ''இவள் யார்??''என்று..

''என் பேத்திபா'' அவளை பர்ர்த்து ''இங்கே வா ''என்றதும் அழுதுவிட்டாள் ...எனக்கு பயம்...அவள் அப்டிதாம்பா என்று அவளை அழைத்து கொண்டு போய்விட்டார்.

ஒரு விடுமுறை நாள் அதேபோல் ஒருசமையம்...மேலே போன் ஒலிக்கும் சத்தம் கேட்டதும் பாட்டி வேகமாய் மேலே சென்று விட்டார்.அங்கே அவளும் நானும் மட்டும் சுற்றி முற்றி பார்த்து விட்டு ஓ..... வென அழ ஆரம்பித்தாள்.எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை... ஒரு நிமிடம் யோசித்து விட்டு அவளை அப்படியே கதற கதற கையில் அள்ளி மொட்டை மாடிக்கு சென்றேன்...ஐயயோ...!!!!

ஹே ....அங்க பாருமா...காக்கா ..எங்கே புடி....புடி...காக்காவ புடி..... என்று தாஜா பண்ணி அவளை சிரிக்கவைத்தேன்....அன்றில் இருந்து அவளும் நானும் ரெம்ப க்ளோஸ்....பிரெண்டு .

அட என்ன பாக்குறிங்க பவித்ரா பிறந்து அப்போது பத்து மாதங்கள் முடிவடைந்து இருந்தது.... ''புஜ்ஜி என்த்ரி....புஜ்ஜி என்த்ரி....''என்று மீண்டும் எழுப்ப...எழுந்து அவளுக்கு ஒரு உம்மா கொடுத்து அந்தநாள் இனிதே ஆரம்பம் ஆனது.


அவளின் முதல் பிறந்தநாள் நான் சென்னையில் இல்லை மதுரையில் இருந்தேன் வந்ததும் அன்று அவர்கள் எடுத்த போட்டோ களை கட்டினர் அவர் அம்மா...
என்னை வேருபெற்றுவதர்காகவே அவளும் என் அக்காவும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவளுக்கு வாங்கிவந்த கரடி பொம்மையை கொடுக்க எனக்கு ஒரு உம்மா கொடுத்து கட்டி கொண்டாள்... இப்போது வயது இரண்டை தாண்டி விட்டது.

தினமும் என்னை வந்து இப்படி எழுப்புவது அவள் தான்.
என் அறையில் சத்தமின்றி நுழைய அவளுக்கு மட்டுமே அனுமதிக்க பட்டிருந்தது .
அவளின் அம்மா அடிக்கடி சொல்வார்கள் யார்கிடேஉம் போகம எப்பவும் அழுதுகிட்டே இருப்பா நீங்க வந்ததுல இருந்து நல்ல பிள்ளைய ஆய்ட்டா...நானும் ப்ரீயா ஆய்ட்டேன்-னு...
பினொரு நாளில் அவளை மழலை பள்ளியில் சேர்த்து விட்டார்கள். தினமும் அவள் மழலை வாய்மொழி ரைம்சும்..கதையும் ...
கேட்டக்க கேட்டக ஆனந்தம்தான்...''புஜ்ஜி'' இது நான் அவளுக்கு வைத்த பெயர் அதையே அவள் எனக்கு மாற்றி வைத்து ''புஜ்ஜி அண்ணா...புஜ்ஜி அண்ணா...'' என்று அழகாய் அழைப்பாள்.
பினொரு நாளில் வெளிநாட்டில் வேலைகிடைக்க அவளை பிரிந்த நாள் ..

அதிகாலை நல்ல பனிமூடிய நாள் அவளை விமான நிலையம் வரை அழைத்து போக முடியாத சுழ்நிலை அறை தூக்கத்தில் எழுந்து வந்தவளுக்கு ஒன்னும் புரியவில்லை .அவளின் அம்மா ''அடியே புஜ்ஜி அண்ணா...ஊருக்கு போகுதுடீ டாட்டா சொல்லு'' என்றார் .அவளும் ''சிக்கிரம் வா'' -னு டாட்டா சொல்லி ஓரிரு உம்மா பரிமாறி கையசைத்து பிரிந்தோம்... கண்கள் கசிய...

இப்போது அவள் இரண்டாம் வகுப்பு படிக்கிரளாம். இப்போது போனில் ''புஜ்ஜி அண்ணா நல்லா இருக்கியா ??? சாப்டியா???''அவளின் அம்மா சொல்ல சொல்ல அவளும் கேட்ட்கிறாள்...எனக்கு டெட்டி பியேர் வாங்கிட்டுவா...இப்போ
ஒரு தம்பி பாபாஅவளோடு இருக்கானாம் ...
இப்போது நினைத்தாலும் மனம் மழலையாகி போகிறது...
ஐ லவ் புஜ்ஜி குட்டி ....

மனசுல பட்டத சொல்லிட்டு போங்க...

Tuesday, September 1, 2009

எடை கூடிப்போன இதயம்...



உன்னை நினைத்து
நினைத்து கனத்து எடை
கூடிபோனது இதயம்.
இத்தனை நாள் -என்
கதறல் கேட்காத உன்
செவிட்டு இதயத்திடமா
கவிதை பாடி இருக்கிறேன்.!?
உயிர் துடிக்கும் போதெல்லாம்
ஊமையாய் இருந்துவிட்டு
இப்போது திருமண செய்தி கொண்டுவந்திருக்கிறாய் ...
உன்னை மறக்கச்சொல்லி
உரக்க சொல்லிவிட்டு போனாய்
இதற்குமேல் ,
இணைவதென்றால் எப்படியும்
இணையலாம் ஆனால் -எத்துனை
மரணங்கள் நடக்குமோ -எத்துனை
மாணங்கள் பறக்குமோ தெரியாது.
இருக்கட்டும் அத்துனையும்
அப்படியே இருக்கட்டும் -நம்
காதலை நார்நாராய் கிழித்து
தோரணம் கட்டி
தொடங்கு -இனிய
இல்லறத்தை
இந்த காதல்
இன்னும் வாழ்கிறது
இந்த இதயத்தில்....
Related Posts with Thumbnails