Tuesday, February 2, 2010

லவ்வாட்டம்...



கண்னடைத்ததும் கபடி ஆடிவிட்டு போகும் இரவு 
இப்போது நொடிகளில் நொண்டியடித்து நிற்கிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
ஒரெ ஓட்டமாய் ஓடிப்போன பொழுது 
இப்பொது ஒரு ஓரமாய் உட்கார்ந்து பரமபதம் ஆடுகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
கூடை பந்தாய் கைவிட்டு போகாத இதயம் 
இப்போது இறகு பந்தாய் இங்கும் அங்கும் அலைபாய்கிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
கில்லி கட்டையாய் சீறிபாய்ந்த சிந்தனை 
இப்போது கொள்ளி கட்டையாய் கொழுந்துவிட்டு எரிக்கிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
பட்டாம்பூசியாய் பரபரத்த பசி 
இப்போது கண்னாம்பூசி காட்டி காணாமல் ஒழிகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்
ஆடுபுலி ஆட்டம் ஆடி ஆர்பரித்த ஆளை 
இப்போது பல்லாங்குழி பள்ளத்தில் பக்குவமாய் சிக்க விடுகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
பரபரப்பாய் பந்தாடிய வயது 
இப்போது கார்கூந்தல் காட்டி பம்பரமாய் சுட்றுகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
கடைசியாய் யாருக்கு காதல் என்று காதலிடம் கேட்டால் 
அவனுக்கும் அவளுக்கும் காதல் என்று 
விடுகதை விளையாடுகிறது காதல்.                                                                      



7 comments:

Paleo God said...

தாயபாஸா...:)) ரெடி ஜுட்..:)

தமிழ் உதயம் said...

எங்கோ யாரோ யாரையோ காதலித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

நிலாமதி said...

காதலினால் தான் உலகம் இயங்குகிறது ....காதலும் பலவகை ( அன்பு என்றும் பாசம் என்றும் )
அளவோடு காதலித்து வளமோடு வாழ்க. கொள்ளிக் கட்டை என திருத்தி விடுங்கள்

சீமான்கனி said...

ஷங்கர்.. said...
//தாயபாஸா...:)) ரெடி ஜுட்..:)//

ஆமா பாஸு...வாங்க...ஆடுவோம்...நன்றி...

தமிழ் உதயம் said...
//எங்கோ யாரோ யாரையோ காதலித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.//

ஆமா..இங்கும் அப்டிதான்...வருகைக்கு நன்றி..தமிழ்...

நிலாமதி said...
//காதலினால் தான் உலகம் இயங்குகிறது ....காதலும் பலவகை ( அன்பு என்றும் பாசம் என்றும் )
அளவோடு காதலித்து வளமோடு வாழ்க. கொள்ளிக் கட்டை என திருத்தி விடுங்கள்//

வாங்க அக்கா..அன்புக்கும் உண்டொ அடைக்கும் தாழ்...திருத்திவிட்டேன் அக்கா நன்றி.....

ஸாதிகா said...

வழக்கம் போல் வித்தியாசமான தலைப்பு கூடவே வித்தியாசமான போட்டோ.வாழ்த்துக்கள் சகோதரரே!

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்ள நீயும் அந்த பின்நவீனத்துவ கூட்டத்தில சேர்ந்திட்டியாடா போ இனி உம்பேச்சு கா...

சீமான்கனி said...

ஸாதிகா said...
//வழக்கம் போல் வித்தியாசமான தலைப்பு கூடவே வித்தியாசமான போட்டோ.வாழ்த்துக்கள் சகோதரரே/!//

வாங்க ஸாதி(கா) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

பிரியமுடன்...வசந்த் said...
//மாப்ள நீயும் அந்த பின்நவீனத்துவ கூட்டத்தில சேர்ந்திட்டியாடா போ இனி உம்பேச்சு கா..//

வா மாப்பி...இதுக்கு பெயர்தான் பின்நவீனத்துவமா??
ஆமாவா...தெரியாம எழுதிடேன் டா...
அது சரி.. NHM Writer ல எழுதுனேன் எப்படி இருக்கு???

Related Posts with Thumbnails