Sunday, August 1, 2010

நாளும் நட்புடன்...


முகமோ முகவரியோ அறியாமல்
மொழி என்ற முற்றத்தில் முக்கூடினோம்.


உனக்காய் சொடுக்கும் ஒவ்வொரு சொடிக்கிலும் -நீ
எனக்காய்  கொஞ்சம் சிரிப்பையோ சிந்தனையோ
ஆறுதலையோ அதிர்வையோ தொடுத்து விடுகிறாய்.


கசப்பு இரத்தத்தில் அமிழ்ந்து கிடக்கும் இதயத்தை-உன்
மந்திர எழுத்துக்களால் சர்க்கரை பாகில் மூழ்கடிக்கிறாய்.


கவிதைகள் விற்கும் கடைவீதியில்
கண்ணடைத்து கடந்துபோகும் என்னை
கைபிடித்து கருத்துக்களில் கலர் காட்டுகிறாய்.


ஏதோ காரணத்தால் உன்னை
தொடராமல் போனவனை தொடர்ந்து வந்து
தொட்டு தோள்கொடுக்கிறாய்.


ஆம் உண்மைதான்  
உனக்காய் தட்டப்படும் ஒவ்வொரு எழுத்துக்களிலும்
கொஞ்சம் சுயநல சூத்திரம் சொல்லித்தான் அனுப்புகிறேன்.
எனக்கும் அதே எழுத்துக்களை தட்டிவிடு என்பதாய் அல்ல
எழுத்துக்களால் என்னையும் எண்ணங்களையும்
தட்டி செதுக்குவாய் என்றுதான்.


கடவுளின் கருவறையில்
நினைவுகூரும் நிகழ்வுக்குமுன்
நீயும் நானும் நிச்சயித்து கொள்வோம் -நாம்
நல்ல நண்பர்கள் என.


விதியின் வசத்தாலோ இல்லை
பதிவின் வசத்தாலோ என்னை நண்பனாய்
அன்பால்  சொந்தமாக்கிக்   கொண்ட சொந்தமாய்ஆன 
அணைத்து நண்பர்களுக்கும்  சமர்ப்பணம்.


அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.






27 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நட்பைக் கொண்டாடும் கவிதை!
நெகிழ்வாய் இருக்கிறது.
கவிதைக்கு, பின் தொடரும்
நண்பர்களின் புகைப்படத் தொகுப்பு,
வெகு சிறப்பு!
(சில எழுத்துப் பிழைகள் சரி செய்து
விடுங்கள்)

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்களுக்கு என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Unknown said...

அழகான வரிகள்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

மாறுபட்ட கற்பனையில், வித்தியாசமான கவிதை.நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

என் இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

சுசி said...

அழகான வாழ்த்து..

நன்றியும் வாழ்த்துக்களும் கனி.

சௌந்தர் said...

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

ஹேமா said...

சீமான்,உங்களுக்கும் மனம் நிறைந்த
நண்பர்கள் தின வாழ்த்துகள்.
நட்போடு ஹேமா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான கவிதை.. ரொம்ப நல்லாருக்கு...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

sakthi said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்சீமான்.

Riyas said...

கவிதை நல்லாருக்குங்க

Priya said...

அழகான வரிகள் கொண்ட அற்புத கவிதை!

தொடர்பவர்களின் படங்களை இனைத்திருப்பது கூடுதல் சிறப்பு!

A very Happy Friendship Day Gani!

நேசமித்ரன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

ஸாதிகா said...

அருமையான வாழ்த்து

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி மாப்ள

அன்பர்கள் சே நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

Deepan Mahendran said...

இனிய நட்பு தின வாழ்த்துக்கள் மாப்பி...!!!!

க ரா said...

இனிய நண்பருக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

http://rkguru.blogspot.com/ said...

nalla kavithai.vazhthukal

Ahamed irshad said...

Fentastic Seeman Super...

சீமான்கனி said...

நிஜாம் அண்ணா
ஜெய்
பாயிஷா
ரமேஷ்ஜி
ஜெய்லானி
சுசிக்கா
சௌந்தர்
அக்பர்ஜி
ஹேமா
ஸ்டார்ஜன்
சக்திகா
ரியாஸ்
ப்ரியா
மித்திரன் அண்ணே
ஸாதிகா அக்கா
வசந்த் மாப்பி
சிவன் மச்சான்
கண்ணன் அண்ணா
குரு
இர்ஷா

அனைவருக்கும் நன்றிகளும் நண்பர்கள் தின வாழ்த்துக்களும்...

Thenammai Lakshmanan said...

ஏதோ காரணத்தால் உன்னை
தொடராமல் போனவனை தொடர்ந்து வந்து
தொட்டு தோள்கொடுக்கிறாய்.
//
நன்றீ மற்றும் அருமை கனி..

சீமான்கனி said...

thenammailakshmanan said...

//ஏதோ காரணத்தால் உன்னை
தொடராமல் போனவனை தொடர்ந்து வந்து
தொட்டு தோள்கொடுக்கிறாய்.
//
நன்றீ மற்றும் அருமை கனி.. //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேனக்கா...

Gayathiry said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் ....!!!

Jaleela Kamal said...

அருமை அருமை,

எப்படி பாலோவர்ஸ் அத்தனையும் இனைத்தீர்கள்.

நண்பர்கள் தினத்துக்கு அதை போட்டு கவிதையும் பிண்ணிட்டீங்க.

வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

காருண்யா said...
//இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் ....!!! //

நன்றி உங்களுக்கும் வாழ்த்துகள்....

Jaleela Kamal said...
//அருமை அருமை,

எப்படி பாலோவர்ஸ் அத்தனையும் இனைத்தீர்கள்.

நண்பர்கள் தினத்துக்கு அதை போட்டு கவிதையும் பிண்ணிட்டீங்க.
வாழ்த்துக்கள் //

வாங்க ஜலிக்கா நலமா...???
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா...

Anonymous said...

arumai

Related Posts with Thumbnails