Wednesday, September 2, 2009

நாலு கண்ணு கொசு...

என்னடா இவன் தீடீர்னு கொசு, ஈ- லாம் ஆராய்ச்சி பண்ண அரம்பிசுட்டன்னு நெனைக்க வேண்டம் .அந்த அளவுக்குலாம் ரிஸ்க் எடுக்க தெரியாதுபா...

இதுஎன் பள்ளி பருவத்து அனுபவம்பா ....
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னோட கூட படிச்சவன்தான் நாலு கண்ணு கொசு.ரெம்ப நல்ல பையன் நல்ல படிப்பான்.அமைதியா இருப்பன்.லீவுல ஊர் சுத்தாம அவங்க அப்பாக்கு ஹெல்ப் பண்ணுவன்.அவங்க அப்பா விவசாயம் பாக்குறவரு.
சரி அந்த பெயர் மட்டேருக்கு வருவோம்..

அவனுக்கு கண்ணு ரெம்ப வீக் அதுனால கண்ணாடி போட்டு இருப்பன்.அப்போ அவன எல்லோரும் நாலு கண்ணானு கூப்டுவோம்.
இந்த கொசு பேர் வந்தது வேடிக்கையான சம்பவம்...ஒரு நாள் மணி எட்டு இருக்கும் அவங்க மாமா வீட்டுக்கு வந்துருந்தான் எங்க வீட்டுக்கும் அவங்க மாமா வீட்டுக்கும் கொஞ்ச தூரம்தான். அங்க வந்தா என் வீட்டுக்கு வராம போக மாட்டான். அப்போ நானும் அவனும் ஹையா நடத்து போயிட்டு இருந்தோம். ஏதோ காமெடி சொல்ல. சிரிச்சு வேகமா மூச்சு இழுத்தான் கொசு வாய்குள்ள உள்ளே போய்டுச்சு...கொஞ்ச நேரம் இரும்பி இரும்பி பாக்குறான் உள்ள போனது போனதுதான் வெளிய வரவே இல்லை...அன்னில இருந்து அவனுக்கு நாலு கண்ணு கொசு னு பேரு வச்சுட்டோம்.


அப்றம் அடிக்கடி வீட்டுக்கு வருவான் ரெண்டுபேரும் சேந்து தட்டான் பிடிக்க போவோம்,மாங்காய் பறிக்க, இப்டியே ஊர் சுத்துவோம் படிக்கும் போதும் ஒன்னதான் எங்க வீட்டு மாடிதான் அப்போ எங்க உலகம்....
தீடீர்னு ஒருநாள் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் விஷயம் சொல்லணும் நே...சொல்லிட்டு இருந்தான். ஒரு நாள் சொல்லியே புட்டான் ...

''நான் உங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருக்குற பானு பொண்ண லவ் பன்றேண்டானு'' .டீன் ஏஜ் ஹர்மொன்ஸ் கபடி ஆடுற வயசு .எனக்கு ஒரே அதிர்ச்சி இவனா? இப்டி பேசுறான் ???!!!! அப்போ எனக்கு தெரிஞ்சு காதல்னா பெரிய கெட்ட வார்த்தை என்னால அத ஏத்துக்கவே முடியல...

அடுத்த நாள் இருந்து அவன்கிட்ட பேசுறதே இல்லை அவன் கூடவே வந்து ''டேய் சாரி டா இனிமேன் அப்படி செய்ய மாட்டேண்டா ப்ளீஸ் என்கூட பேசுடா'' டெய்லி கெஞ்சுவான் என்னால ஜிரணிக்கவே முடியல .அவன் இதுக்க்காகதான் டெய்லி வீட்டுக்கு வந்தனா??இதுக்காகத்தான் என்கூட நண்பன பழகுனனா??நல்ல பையனாச்சே...ஏன் இப்டி மாறுனான்...அவன பாக்கும் போதெல்லாம் எனக்கு கஷ்ட்டமா இருக்கும். நான் பேசாம இருக்குறத நெனச்சு ரெம்ப கவலை பட ஆரம்பிச்சுட்டான் சரியா படிக்குறதும் இல்ல...எனக்கு மனசே கேட்ட்கல...நான் ஒரு முடிவு பண்ணுனேன் ஓகே அடுத்த வாரம் அவன்கிட்ட இனிமேல் இப்டி பண்ண மாட்டேன்னு சத்தியம் வாங்கிட்டு பழம் விட்டுடுவோம்னு ....

அடுத்த வாரம் திங்கள் அவன் ஸ்கூலுக்கே வரல...நான் வீட்டுக்கு போனா என் அம்மா ''சொல்லறங்க டேய் உன்கூடவே சுத்திட்டு இருப்பானே அந்த குமார் பையன், அவன நேத்து பாம்பு கடிசுருச்சம்டா அவங்க மாமா சொன்னாரு. நீ சைகிள எடுத்துட்டு போய் பாத்துட்டு வாடான்னு'' சொல்ல எனக்கு ஒண்ணுமே புரியல'' எப்பமா??'' ....''மத்தியானம் அவங்க மாமா சொன்னாருடா. போய் பாத்துட்டு சிக்கரம் வந்துருடா....னாங்க ... நான் வேகமா பதட்டதோட போய் பாத்தா அவங்க வீட்டு முன்னாடி ஒரே கூட்டம் .
அவங்க அப்பா என்ன பாத்ததும் புடிச்சுட்டு அழுறாரு...அவங்க அம்மா ஒரு விசும்பளோட ''தம்பி பாருடா குமார பாருடா, ரெண்டுபேரு ரெட்ட புள்ளமாறி திரிவீகலேடா. இப்போ பாருடா இவே எப்படி கேடக்கானு .....''
நான் பார்த்த முதல் மரணம்... நான் அழுத முதல் மரணம் ...நான் உணர்ந்த முதல் மரணம் ....அவன் முகத்துல ஏதோ ஒரு சோகம் தெரிஞ்சது எனக்கு மட்டும்... என்கிட்ட கடைசி வரைக்கும் பேசமட்டிண்டேல... போட நான் போறேன்னு அவன் சொல்லறமாதிரி தோனுது...
அடுத்த நாள் ஸ்கூல் லீவு விட்டுடாங்க...அனந்த சோகம் ரெம்ப நாள் என்னைவிட்டு போகவே இல்ல...
ஆம் இன்று அவனுடைய 14-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றும் அந்த வலி உணர முடிகிறது...
அவனுக்காக இந்த பதிவு....
மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ....

5 comments:

Jaleela Kamal said...

ரொம்பவே சோகம் இந்த நிகழ்சி மனதை விட்டு அழியாது இல்லையா?

சீமான்கனி said...

Jaleela said...
ரொம்பவே சோகம் இந்த நிகழ்சி மனதை விட்டு அழியாது இல்லையா?

ஆம் அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ரெம்ப உருக்கமா இருக்கு சகா நண்பனி பிரிவு மிக கொடுமையானது...நானும் உங்கள் சோகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails