Monday, November 1, 2010

வெள்ளைக்காரி...

 


ஊதி விட்டவனின் உள்ளுக்குள்
உமிழ்ந்து விட்டுப் போகும்
உத்தமி இந்த வெள்ளைக்காரி.
 
சத்தமில்லா முத்தங்களை
சலிக்காமல் தந்தாலும்
இதழ்களுக்கிடையே இருந்துகொண்டு
ஈரக் கொலையில் ஈட்டி எரியும்
இன்ப வெள்ளைக்காரி.

காகித சட்டையோடு
காசுக்கு கை வந்து  
காற்றை சாக்கடையாய்
கற்பகூட்டுக்குள்ளே கலந்துவிடும் 
கண்ணிய  வெள்ளைக்காரி. 

மூச்சுபைக்குள்ளே
நிக்கோடின்  நெடி வீசி
கார்பன் கரி பூசி
கேன்சர் புற்று விற்கும் 
ஸ்பான்சர் வெள்ளைக்காரி. 

சூரியக் கங்கின் சூடு தாங்காத
சுவாசக் கூட்டுக்குள்ளே கொள்ளிவைக்க 
விரல் இடுக்கில் விறாகாய் முளைத்த
கொள்ளிவாய் வெள்ளைக்காரி.

விரட்டி விட்டோம் 
வெள்ளையனை என்ற
அறியாத மூடர் மூளையை 
அடிமையாக்கி வைத்திருக்கும்  
அழகான வெள்ளைக்காரி.



                                           




13 comments:

ஸாதிகா said...

அட..அட..அட.. வெள்ளைக்காரியைப்பற்றி விலாவாரியாக கவிதை பாடி உண்மையில் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டீர்கள் சீமான் கனி.நாள் சென்று வந்து நல்லதொரு கவிதை படைத்தமைக்கு நன்றி.

ஸாதிகா said...

ஐ..வடை எனக்குத்தான்.

நிலாமதி said...

மூடர் மூளையை அடிமையாக்கிவைத்திருக்கும் வெள்ளிக் காரி ...........மனசு வைத்தால் விரட்டலாம். பயனுள்ள் பதிவு

Unknown said...

தேவையான கவிதை... மிகவும் அருமை

சுசி said...

எங்க போனீங்க??

நல்ல கருத்தோட எழுதி இருக்கிங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

//மூச்சுபைக்குள்ளே
நிக்கோடின் நெடி வீசி
கார்பன் கரி பூசி
கேன்சர் புற்று விற்கும்
ஸ்பான்சர் வெள்ளைக்காரி. //

அருமை மாப்பு!

எங்கடா போன? சொல்லவே இல்ல :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Nicew. tham adichittu vare

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை... அர்த்தம் சொல்லும் வரிகள்...

தமிழ் உதயம் said...

வெள்ளைகாரிக்கு பின்னால் ஒரு சூனியக்காரி.

Priya said...

மிகவும் அருமை!

அஹ‌ம‌து இர்ஷாத் said...

அருமையான‌ க‌ருத்துக‌விதை சீமான்..ந‌ல்லாயிருக்கு

ஹேமா said...

சீமான்...சுகம்தானே.தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கு.

வெள்ளைக்காரியை யாரவது இனம் கண்டு ஒதுக்கினாலே உங்கள் பதிவுக்கு ஒரு வெற்றிதான் !

DREAMER said...

சத்தியமாக சிகரெட்-ஐப் பற்றி இப்படியொரு கவிதை வாசித்ததில்லை..! வார்த்தை ஜாலம் மிக அருமை..!

-
DREAMER

Related Posts with Thumbnails