Wednesday, April 14, 2010

சிறகொடிந்த சித்திரை திருநாள்...



கோடை விடுமுறை... குதுகலம்... கும்மாளம்... சந்தோசம்... இதை மட்டுமே தந்த  சித்திரை மாதம் இப்போது  வெறுமையாய்...

பள்ளி  நாட்களில் விடுமுறையில் (ஞாயிற்று கிழமை) வரும் பண்டிகை நாட்கள்மேல் வெறுப்பாய் வரும்.மணம் சிட்டு குருவியாய் சிறகடிக்காமல் கூட்டு குருவியாவே திரியும்
கொண்டாட்ட சந்தோசங்களை குழிதோண்டி புதைக்க சொல்லி கூப்பிடும் பள்ளி மணியோசை.கோடையில்  அந்த வருடத்து மொத்த சந்தோசத்தையும் சுமந்து வரும் சித்திரை.
  
   மதுரை, சினிமாவைதவிர எந்த ஒரு பொழுது போக்கு அம்சமும் இல்லாத என் பள்ளி பருவகால  மதுரை.அந்த மதுரையின் கொண்டாட்டமான எட்டு நாள்களை சுமந்துவரும் மாதம் அது.400 வருட பழமையான வரலாற்று (வரலாறு எனக்கு தெரியாதுபா..)சிறப்பு மிக்க சித்திரை திருவிழா,தமிழ் புத்தாண்டு,தமுக்கம் மைதானத்து பொருட்காச்சி, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்சி என்று மதுரையே கலைகட்டி இருக்கும்.


என்னை இந்த நாட்களில் பிடிக்கமுடியாது.கோடை விடுமுறையின்  முதல் வாரம் குற்றால ஸ்பரிசம்.அதை தொடர்ந்து சித்திரை எட்டு நாள் திருவிழா. அந்த எட்டு நாளும் மணசு ரெக்கைகட்டி பறக்கும்.நண்பர்கள் கேட்பார்கள் டேய்...நீ முஸ்லீம் பையன் நீ ஏண்டா எங்ககூட வர்ர?? இதெல்லாம் உங்க வீட்டுல தெரிஞ்சா அடி பின்னபோரங்கடா-னு.அம்மா,அத்தா(அப்பா)கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுதான் வர்றேன்டானு சொல்லுவேன்...அந்த சந்தோசங்களை யாருமே பறிக்கலா  முழுசா அனுபவிச்சேன். அம்மா சில கன்டிஷன் போட்டு  புது சட்டையும் போட்டு அனுப்பி வைப்பாங்க ஆனால் பொருட்காச்சிக்கு மட்டும் அவங்க கூடத்தான் போகணும் (தொலைந்து போயிருவேனாம் )அப்போதானே இஷ்ட்டபட்டத வாங்க முடியும்.அந்த நாட்கள் இன்னும் மனசவிட்டு போகல.


இன்று தமிழ் புத்தாண்டையும் மத்திபுட்டாங்க.வைகைல தண்ணியும் இல்லாம பண்ணிடாக.அந்த நியாபகங்களை சுமந்துகொண்டு சிறகொடிந்த சிட்டு குருவியாய் நானும் இங்கே....(அப்பாடா ஒருவழியா தலைப்புக்கு லிங்க் குடுத்தாச்சு) இன்ஷா அல்லா எனக்கும் சேர்த்து மாப்பி வசந்து நல்லா கொண்டாடிட்டு வருவான்.வந்து ஒரு பதிவு  போட்டு வெறுப்பேத்துவான்.

நீங்கலாம் எப்டிதான் பெரிய பெரிய கட்டுரைலாம் எழுதுறீங்களோ???கட்டுரை சரி இல்லனா யாரும் என் கனவுக்குள்ள ஆள் அடியாள் அனுப்பதிங்க இங்கேயே...  குனியவச்சு நல்லா குமுறலாம் அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு....ஆமா.
அன்புடன்,






16 comments:

நிலாமதி said...

நான்தான் முதலாவதா? உங்களுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நான்தான்
இரண்டவது
சூப்பரா இருக்கு தலிவா..
கலர்புல்ல இருக்கு கவிதை ..
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

ஆனால் பொருட்காச்சிக்கு மட்டும் அவங்க கூடத்தான் போகணும் (தொலைந்து போயிருவேனாம் )அப்போதானே இஷ்ட்டபட்டத வாங்க முடியும்.அந்த நாட்கள் இன்னும் மனசவிட்டு போகல.
---wow alagana ninaivugal

and தென் நோ பீலிங்க்ஸ் மிஸ்ஸிங் மதுரை திருவிழா
நாம கொண்டாடுவோம்
அதைவிட பெருசா
.ok அண்ணா..
அழகா இருக்கு உங்க கட்டுரைகளும் ..
முதல் முறை வந்து இருக்கேன் .
நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சீமான்கனி said...

நிலாமதி said...
//நான்தான் முதலாவதா? உங்களுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

ஆமா அக்கா நீங்கதான் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்... சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்....

Complan Surya said...
//நான்தான்
இரண்டவது
சூப்பரா இருக்கு தலிவா..
கலர்புல்ல இருக்கு கவிதை ..

வாங்க சூர்யா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்... ஐயா ராசா இந்த கருத்து முந்தைய பதிவுக்குதானே...அத தெளிவா சொல்லிபுடுங்க.. பாருங்க சுசி,ப்ரியா,மலிகா கா,
ஸதிகா கா,தேனக்கா...எல்லோரும் ஒரு மாதிரி பாக்குறாங்க...அவ்வ்வ்வ்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்//

சீமான்கனி said...

Complan Surya said...
//தென் நோ பீலிங்க்ஸ் மிஸ்ஸிங் மதுரை திருவிழா
நாம கொண்டாடுவோம்
அதைவிட பெருசா
.ok அண்ணா..
அழகா இருக்கு உங்க கட்டுரைகளும் ..
முதல் முறை வந்து இருக்கேன் .
நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா//

முதல் முறை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா வருத்தப்பட்டு எழுதுனாலும் வருத்தபடாம வாசிக்கும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்...

www.bogy.in said...
//தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்//

நன்றி உங்களுக்கும்சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்....

ஈரோடு கதிர் said...

//வைகைல தண்ணியும் இல்லாம பண்ணிடாக.//

இதுதான் கொடுமை

Deepan Mahendran said...

//அந்த காலமெல்லாம் போயிடிச்சு...!!!//

புத்தாண்டு வாழ்த்துக்கள் மச்சான்...!!!

Priya said...

ஷார்ட் & ஸ்வீட்டா அழகான நினைவுகள்!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கனி!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது
மனம் 'கனி'ந்த நல்வாழ்த்துக்கள்!

தமிழ் உதயம் said...

சித்திரை திருநாள் ஞாபகங்கள்... நன்றாக இருந்தது.

சீமான்கனி said...

ஈரோடு கதிர் said...
//வைகைல தண்ணியும் இல்லாம பண்ணிடாக.//

//இதுதான் கொடுமை//
ஆமாம் அண்ணே...கருத்துக்கு நன்றி...
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கதிர் அண்ணே...

சிவன். said...
//அந்த காலமெல்லாம் போயிடிச்சு...!!!//

//புத்தாண்டு வாழ்த்துக்கள் மச்சான்...!!!//

ஆமாம் என்னத்த சொல்றது...கருத்துக்கு நன்றி...
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மச்சான்...

Priya said...
//ஷார்ட் & ஸ்வீட்டா அழகான நினைவுகள்!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கனி!!!//

நன்றி உங்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் ப்ரியா....

NIZAMUDEEN said...
//உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது
மனம் 'கனி'ந்த நல்வாழ்த்துக்கள்//

வாங்க நசீம்...அண்ணே... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...உங்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...
//சித்திரை திருநாள் ஞாபகங்கள்... நன்றாக இருந்தது//
நன்றிகள்...ரமேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸாதிகா said...

மலரும் நினைவுகளா?ம்ம்..நடத்துங்க..நடத்துங்க..பார்த்தீங்களா கவிதைசிகாமணி,சிந்துபாத் நீங்க எழுதுற அனுபவம் கூட கவிதையாக தெரிகிறது.அதுக்கு எதுக்கு அவ்வ்வ்வ்வ்...காலரை தூக்கிவிட்டுக்குங்க சீமான்கனி.

சீமான்கனி said...

ஸாதிகா said...
//மலரும் நினைவுகளா?ம்ம்..நடத்துங்க..நடத்துங்க..பார்த்தீங்களா கவிதைசிகாமணி,சிந்துபாத் நீங்க எழுதுற அனுபவம் கூட கவிதையாக தெரிகிறது.அதுக்கு எதுக்கு அவ்வ்வ்வ்வ்...காலரை தூக்கிவிட்டுக்குங்க சீமான்கனி//

நன்றி அக்கா... அடடா இப்போ பார்த்து டி ஷர்ட் போட்டு இருக்கேனே...இருங்க அக்கா ஷர்ட் போட்டுட்டு வர்றேன்...அன்புக்கும் கருத்துக்கும் நன்றி...ஸாதிகா அக்கா...

காமராஜ் said...

மிக அருமையாக வந்திருக்கு சீமான்.அசத்துங்கள் தொடருங்கள்.

சீமான்கனி said...

நன்றி காமராஜ் அண்ணே...தொடர்ந்து வாங்க...

Related Posts with Thumbnails