Monday, December 21, 2009

ஒற்றை காலில்...



ஒற்றை காலில் ஓடி ஆடி
உலக வார்த்தை எல்லாம்
உமிழ்ந்து விட்டு
ஒன்றும் அறியாதவன் போல்
ஓரமாய் சரிந்து கிடக்கிறது - என்
ஒற்றை ரியால் பேனா.


ஒற்றை காலில்
உயரே நின்று
உலகுக்கு மனம் வீசி
உனக்காய் காதல் பேசி
ஆபத்தான அழகை
முள் குத்திக்காட்டும்
ஒற்றை ரோஜா...


ஒடிந்து வளைந்து நெளிந்து
ஒவ்வொரு இலையும்
உதிர்ந்த பின்னும்
ஒடித்த ஒவ்வொரு கிளையும்
ஊண்டி வைக்கும்போது  
தனித்தனி மரமாய் தளீர்  விடுகிறது
ஒற்றை முருங்கை மரம்...


இரண்டு கால்கள்
இரும்பாய் இருந்தும்
இயன்றதை கூட செய்யாமல்
இல்லத்தரசியை
இயங்கவிட்டு - இருந்த
இடத்திலே இன்பமாய்
இருபதுக்கு இருபது பார்த்து
இந்தியா தோற்றதும்
இவங்கேலாம் இந்தியர்களா??
இழிவாய் பேசும் இவன்.                                          





4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

மாப்ள ரொம்ப பொறிஞ்சு தள்ளிட்டீங்க

முதல் இரண்டு பாரா செம்ம சிந்தனை ராஸா...!

சீமான்கனி said...

பிரியமுடன்...வசந்த் said...
//மாப்ள ரொம்ப பொறிஞ்சு தள்ளிட்டீங்க

முதல் இரண்டு பாரா செம்ம சிந்தனை ராஸா...!//

மாப்ஸ்...என்னை எப்போது மறக்காமல் வந்து கருத்தோடு உற்சாகமும் தந்து போகும் வசந்த் மாப்ஸ்...ரெம்ப நன்றி இன்னும் இரண்டு பதிவை விட்டுடீங்களே அதையும் படிங்க...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..

சீமான்கனி said...

kamalesh said...
//ரொம்ப நல்ல இருக்குங்க...

வாழ்த்துக்கள்..//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ்...

Related Posts with Thumbnails