Thursday, March 4, 2010

இது காதல் கடிதம் அல்ல...(3)


(புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை பாகம் 1... பாகம் 2...)


இதய துடிப்பை இம்சையாய் உணர்த்திய தருணங்கள்...


வரப்போகும் விபரீதம் தெரியாமல் - உனக்கு
அனுப்பபட்டிருந்தது என் இரண்டாம் கடிதம்…
அவசரபட்டு விட்டேனோ…


அலைபாய்கிறது மனது;

இரண்டு மூன்று நாட்களாய் கல்லுரிசலையில்-உன்
கால்தடங்களை கானவில்லை!!!


காய்ந்துபோன சறுகுகள் சத்தம் போட்டு 
சொன்னது வசந்தம் வராததை.

உன்னை தொடர்வது தொல்லை என்று-சொல்லி
இருந்தால் தொடராமல் தொலைந்திருப்பேன்.

கண்டிப்பாய் தெரியும் என் கவிதைகளில்
காயபட்டிருக்க மாட்டாய்.


உன் தோழி ஒருத்தி தொடர்ந்து வந்து
நீ தொலைவாய் எங்கோ துவண்டு கிடப்பதாய்
சொல்லி அந்த விலாசம் தந்தாள்.

அங்கு...

இதய துடிப்பு இரைசலாய் கேட்கும்
எமனின் இல்லம் அது.


உடலை சல்லடையாய் துளைத்து
உயிர்களய் துவைத்து
அனுப்பும் ஆஸ்பத்திரி அது.....(தொடரும்...)



10 comments:

ஸாதிகா said...

தம்பி சீமான் கனி கவிதைப்போற போக்கைப்பார்த்தால் இது நிஜக்கவிதையா?கற்பனைக்கவிதையா?

Unknown said...

சீமான்கனி இது நல்ல பிள்ளைக்கு அழகு இல்ல உண்மைதான் சொல்லுரிங்க போல
லவ் எல்லாம் வேணா அப்பு

Jaleela Kamal said...

எனக்கென்னவோ நிஜக்கவிதை போல் தான் தெரிகிறது.

ஸாதிகா said...

ஆஹா..கொளுத்திப்போட்டாச்சு...

சிவாஜி சங்கர் said...

:)

சீமான்கனி said...

ஸாதிகா said...
//தம்பி சீமான் கனி கவிதைப்போற போக்கைப்பார்த்தால் இது நிஜக்கவிதையா?கற்பனைக்கவிதையா?//

வாங்க ஸாதிகா இது முழுக்க முழுக்க கற்பனைதான் ...
கவிதையின் வரிகள் மட்டும் தான் எனக்கு சொந்தம் கதை கற்பனைதான்...
ஏ.......ன்...????அவ்வவ்வ்வ்வ்......
நன்றி கா...

சீமான்கனி said...

A.சிவசங்கர் said...
//சீமான்கனி இது நல்ல பிள்ளைக்கு அழகு இல்ல உண்மைதான் சொல்லுரிங்க போல
லவ் எல்லாம் வேணா அப்பு//

வாங்க சங்கர் ராசா....
அதெல்லாம் இல்ல...
நன் நல்ல பிள்ளைதான்....
நன்றி நண்பா....

சீமான்கனி said...

Jaleela said...
//எனக்கென்னவோ நிஜக்கவிதை போல் தான் தெரிகிறது.//

வாங்க அக்கா...நலமா????

உங்களுக்குமா!!!!???இந்த தம்பிமேல சந்தேகம்....??!!!!
நன்றி அக்கா....

சீமான்கனி said...

ஸாதிகா said...
//ஆஹா..கொளுத்திப்போட்டாச்சு...//

ஆஹா..அக்கா...இதெல்லாம் உங்க வேலைதானா???தம்பி பார்த்தா பாவமா இல்லையா??? :))))

Sivaji Sankar said...
:)//


வாங்க சிவாஜி முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....இனி இணைந்திருப்போம்...

நிலாமதி said...

உணர்வுகள் வரிகளாய்..............அருமை.

Related Posts with Thumbnails