Monday, December 21, 2009

புன்னகை திருடி...


பூக்களை திருடி புன்னகைக்க 
கற்று கொண்டவள் நீ.
இப்போது பூக்கள் கூட எனக்காய்
 புன்னகைப்பது  கிடையாது. 


சிரிக்க மறந்து விட்டேன்.
சில்லறைக்கு   கூட சிரிக்க மறுக்கிறேன். 
சிந்தனை சிறகு விரித்து
சிட்டு குருவியாய்
சிறகடித்து பறந்தவன் நான்.
நீ சிறிதாய் சிரிக்கும்போது கூட
சில்லென சிலிர்த்து
சிகரம் போய் வருபவன் நான்.


சிந்தனையில் சிரகடிப்பதோ நீ.
உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்.


சின்ன சின்ன
சிறகுகள் விரித்து
சிட்டாய் பறக்கும்
பட்டாம் பூசியே 
அவளை பார்த்தால்  .
சிணுங்கள் சிரிப்பை
சிதறாமல் சேர்த்து வரச்சொல்.
சிரிக்க மறந்ததால் சீக்கிரம்
செத்து விடுவேன் போல் தெரிகிறது...                                                                                                          
இங்கே... இதையும் படிங்க...                                                    

8 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//சிந்தனையில் சிரகடிப்பதோ நீ.
உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்.
//

அருமை மாப்ள...!

சீமான்கனி said...

பிரியமுடன்...வசந்த் said...
//சிந்தனையில் சிரகடிப்பதோ நீ.
உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்.
//

//அருமை மாப்ள...!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாப்ஸ்...பழைய நியாபகங்கள் வந்து போகுதோ....???

ஸாதிகா said...

//
சிரிக்க மறந்து விட்டேன்.
சில்லறைக்கு கூட சிரிக்க மறுக்கிறேன்.
சிந்தனை சிறகு விரித்து
சிட்டு குருவியாய்
சிறகடித்து பறந்தவன் நான்.
நீ சிறிதாய் சிரிக்கும்போது கூட
சில்லென சிலிர்த்து
சிகரம் போய் வருபவன் நான். //
அழகிய வரிகள்.அருமையான கவிதை.

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க...

வாழ்த்துக்கள்..

சீமான்கனி said...

kamalesh said...
//ரொம்ப நல்ல இருக்குங்க...

வாழ்த்துக்கள்..//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ்...

சீமான்கனி said...

ஸாதிகா said...
//அழகிய வரிகள்.அருமையான கவிதை.//


கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஸாதி(கா)..

kamalesh said...
//ரொம்ப நல்ல இருக்குங்க...

வாழ்த்துக்கள்..//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கமலேஷ்...

SUMAZLA/சுமஜ்லா said...

//உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்//

மன ஆழத்தின் சேதாரத்தை உணர்த்தும் சிறப்பான வரிகள்!!!

சீமான்கனி said...

SUMAZLA/சுமஜ்லா said...
//உன் நினைவுகளின்
ரணத்தில் சிறகுகள்
கனத்து சீக்கிரம்-களைத்து
திரும்பி விடுகிறேன்//

/மன ஆழத்தின் சேதாரத்தை உணர்த்தும் சிறப்பான வரிகள்!!!/

வாங்க அக்கா நலமா??உங்கள் பின்னுட்டம் கண்கொண்டு மிக்க மகிழ்ச்சி அக்கா நேரம் கிடைக்கும்போது வந்து போகவும்...உங்கள் கனவுகள் மெய்பட வாழ்த்துகள் ...

Related Posts with Thumbnails