Tuesday, June 29, 2010

மாக்கோலம் பூக்கோலம்...


வாசலிலே நீர்தெளிக்க
வளையோசை ஊர்எழுப்ப
வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட
வச்சகண்ணு வாங்காம
வானமே உன்வாசல்வர
வசியம் போட்டு வரஞ்சுவச்ச
வரிசைக்கோலம் நெனவிருக்கா!!?
***
நீ கோலம்போட புள்ளி வைச்சு
புத்தகம் பார்த்திருக்க  ராவோடு ராவாய்
நட்சத்திரங்களை - தரைக்கு
தடம் பெயர்த்து வந்தவளே
 என்று ரகசியமா சொல்லிவச்ச
ராப்பொழுது நெனவிருக்கா!!?.
***


பிறைநிலாவ பிச்சுவந்து
கிள்ளி கிள்ளி அத எடுத்து
வாசலிலே நீர்தெளிச்சு
நீ போட்ட வாழ்த்துகோலம் 
நெனவிருக்கா!!??
***
வீட்டு  முற்றத்தில்  குத்தவைத்து
உட்கார்திருந்த உன்னை;
கோலம் என்றெண்ணி முதல் பரிசை
உன் வீட்டுக்கு அறிவித்த
கோலப்போட்டி நெனவிருக்கா!!?.
***
மருதாணி அரைச்சு 
மல்லிகை  கையில்  கோலம் போட்டு
அழகா இருக்கானு அடுத்தநாளு கேக்கையில 
இருட்டுல  இலுவிவிட்ட இந்த கோலம் அழகுன்னு
கண்ணாடி காட்டி கண்ணடிச்சது நெனவிருக்கா!!?.
***

ஆத்தா கிட்ட அடிவாங்கி
'யப்பே...'ன்னு அழுகையில
கண்ணத்த கடந்துவந்து
கண்ணீர் போட்ட நீர் கோலம்
கடவாயில்  உப்பு கரிச்சது
கண்ணே  நெனவிருக்கா!!?.
***

கைவிரல் நடனமாட 
கைவளவி தாளம்போட
கலர்கலரா மாவெடுத்து 
கச்சிதமா கோலம்போட்டு  
கண்மூடி கனாகண்ட
காதலான எழுப்பிவிட்டு 
கதவோரம்  வந்துநின்னு  
கண்ணாடிக்க,
கொலுச பேசவிட்டு
கோபப்பட்ட நெனவிருக்கா!!?.
***
கார்த்திகை மாசத்து
தீபத்துல   திரியவச்சு
தெருவெல்லாம்
தினறவச்சு நீ போட்ட
தீக்கோலம் நெனவிருக்கா!!?.
***
 எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு  நீபோக - உன் 
தலையயேரிய   மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.
***
வண்டியுருக்கு வாக்கப்பட்டு வண்டியிலே  நீபோக
வகைவகையா கோலம்பார்த்த என் வீட்டு வாசப்படி
வாழவெட்டியா வழியத்து கெடக்குமுன்னு
வஞ்சியே  நெனவிருக்கா!!?.
***















13 comments:

நேசமித்ரன் said...

நெனப்பிருக்கா....?

நினைவுகளின் கிளறல் நண்பரே

ப்ரியமுடன் வசந்த் said...

//வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட//

இது ரசனை..

//வீட்டு முற்றத்தில் குத்தவைத்து
உட்கார்திருந்த உன்னை;
கோலம் என்றெண்ணி முதல் பரிசை
உன் வீட்டுக்கு அறிவித்த
கோலப்போட்டி நெனவிருக்கா!!?.//

சூப்பர்ப்..

//எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.//

கிளாசிக் டச் கிராமத்து நடையில அசால்ட்டா அருமையா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் நன்றிகள்

ஸாதிகா said...

//எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்க
மாக்கோலம் பூக்கோலமா
மாறிப்போனது நெனவிருக்கா!!?.
***//என்னே கற்பனை வளம்.பாராட்டுக்கள் சீமான்கனி.

Feros said...

//நீ கோலம்போட புள்ளி வைச்சு
புத்தகம் பார்த்திருக்க ராவோடு ராவாய்
நட்சத்திரங்களை - தரைக்கு
தடம் பெயர்த்து வந்தவளே
என்று ரகசியமா சொல்லிவச்ச
ராப்பொழுது நெனவிருக்கா!!?///

அருமை இப்படியல்லாமா ம்ம் சூப்பர்

Ahamed irshad said...

எல்லாமே நினைவிருக்கா....?

அருமையான கவிதை சகா...

சிநேகிதன் அக்பர் said...

அருமை நண்பரே

தமிழ் உதயம் said...

எட்டு புள்ளி கோலம் போட்டு
எட்டுவச்சு நீபோக - உன்
தலையயேரிய மல்லிகைபூ
எரங்கிவந்து கோலம்பாக்

கவிதை வரிகள் மனதை ஈர்க்கின்றன.

சுசி said...

வஞ்சி வஞ்சத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை கனி..

கோலத்தை வச்சு கோலம் போட்டிருக்கிங்க.

க ரா said...

அருமையா இருக்குங்க ஒவ்வொன்னும்.

சீமான்கனி said...

நேசமித்ரன் said...
//நெனப்பிருக்கா....?

நினைவுகளின் கிளறல் நண்பரே //

நினைவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மித்ரன் சார்...

ப்ரியமுடன்...வசந்த் said...
//கிளாசிக் டச் கிராமத்து நடையில அசால்ட்டா அருமையா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் நன்றிகள் //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மாப்பி...

ஸாதிகா said...

//என்னே கற்பனை வளம்.பாராட்டுக்கள் சீமான்கனி.//
நெசமாவா!!! வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஸாதிகா அக்கா

Feros said...
//அருமை இப்படியல்லாமா ம்ம் சூப்பர் //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பெரோஸ்...அடிக்கடி வாங்க...

அஹமது இர்ஷாத் said...

//எல்லாமே நினைவிருக்கா....?

அருமையான கவிதை சகா... //

இல்லாம எப்படி போகும் இர்ஷா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...சகா..

அக்பர் said...
//அருமை நண்பரே //

தொடர்ந்து வந்து உற்சாகம் தருவதற்கு மிக்க நன்றி அக்பர்...

தமிழ் உதயம் said...
//கவிதை வரிகள் மனதை ஈர்க்கின்றன.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ்ஜி...


சுசி said...
//வஞ்சி வஞ்சத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை கனி..

கோலத்தை வச்சு கோலம் போட்டிருக்கிங்க.//

கவிதைல அவ்வளோ ஒன்றி போய்டீங்களா சுசிக்கா நன்றி சுசிக்கா...

இராமசாமி கண்ணண் said...
//அருமையா இருக்குங்க ஒவ்வொன்னும். //

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க...கண்ணண்.

ஈரோடு கதிர் said...

அசத்தல் கனி

சிவாஜி சங்கர் said...

நல்லாருக்குண்ணே பாரதிராசா படம் மாதிரி..!! :)

சீமான்கனி said...

ஈரோடு கதிர் said...
//அசத்தல் கனி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர் அண்ணே...

Sivaji Sankar said... \

//நல்லாருக்குண்ணே பாரதிராசா படம் மாதிரி..!! :)//

அப்டியா சிவா நன்றி ....

Related Posts with Thumbnails