Friday, August 14, 2009

எனது நிலாக்கால கவிதைகள்............


நிலா கவிதைகள்

அடி என்னவளே,
ஏங்குகிறேன் உன்மேல் -எங்கே
திருடினாய் இவ்ளவு அழகை.,
ஒளியால் உன்வசபடுதுகிறாய் உலகை.

உன் பால் முகம் வடிகிறது என் இரவுகளில்...

நட்சத்திரங்களை காண தவம் கிடக்கிறோம் இங்கே
நட்சத்திரங்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன -உன்னை
காண அங்கே கண்ன்சிமிட்டியவாரே .,

நாணத்தால் மேகத்தில் ஒழிகிறபோது ,
வானத்தில் விழி அலைகிறது .,

நீ இல்லாத அந்த கொடுமை இரவுகளுக்கு -இங்கே
அம்மாவாசை என்று பெயர்.,

ீ ஏழைகளின் ,....

இருள் துடைககவந்த விரல்- உன்னை
அடைந்த ஆனந்தத்தில் ஆர்பரிகிறது கடல்,.

வளர் பிறைகளில் உறைகிறேன்,
தேய் பிறைகளில் உருகுகிறேன்.,

மாலையில் மலரும் மகரந்தம் இல்லா பூ நீ...
காலையில் கதிரவன்(காதலன்) கண்பட்டதும்
ஏனோ மறைகிறாய் ????

உன்னை முத்தமிட்ட கார்முகிலன் -மின்னல்
காட்டி சிரிக்கிறான் என் ஜன்னலில்.,

உன் கரம் பிடித்து வலம்வர - காத்துகிடக்கிறேன்
வானம் காட்டி குட்டி போவாயா????
இவன்,
நிலாபிரியன்......

No comments:

Related Posts with Thumbnails