Friday, August 14, 2009

ஓர் விடிந்த இரவு ...

ஓர் விடிந்த இரவு ...


உன் கூந்தல் இருளில் ,
விடியலின் சலனம் அறியாமல்,
தலை புதைத்து நான்.

நீயோ நாணம் தொலைத்து -ஏன்
மார்பில் புதைந்து தேடி எதையோ கொண்டிருக்கிறாய்...

காலை குளிர் -அணைப்பின்
உஷ்ணம் எது நிஜம் எது பொய்....
விளங்கவில்லை இருவருக்கும் -நம்
உறக்கம் தின்று ஓரமாய் இணைந்து
கிடக்கிறது நம் உடைகள் .

சுகத்தின் வலி உணர்ந்து - வலிஇன்
சுகம் உணர்ந்து அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்...
ஏதேதோ நடத்திருக்கும் ;

ஈரமுத்தம் காயும்
முனங்கள் சத்தம் ஓயும் -அந்த
இருண்ட விடியலுக்காய்
காத்திருப்போம் காதலியே உறங்காமல்...



No comments:

Related Posts with Thumbnails