Wednesday, August 26, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(5)





(இப்படிதான் எழுதி இருந்தாய்...)சாரி ...நான் வேற ஒருத்தரை .....அவரை உங்களுக்கு நல்லா தெரியும் அவரும் என்னை.....
சாரி ...என்று.....
மறுநாள் உன்னை பார்க்கவே மனமில்லாமல் இருக்க, உன் அண்ணன் வந்து அழைத்து போனான் மாடிக்கு கொஞ்சம் பேசிவிட்டு எங்கோ போனான்...நமக்கான வானத்தில் நான் மட்டும் கரைந்திருந்தேன்...நீ வந்தாய்..தேநீர் கொண்டு ...மெதுவாய் கேட்டேன் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று எனக்கும் உங்களுக்கும் அவரை நல்லா தெரியும்...என்றாய் நல்லா யோசிச்சு பாருங்க என்றாய்....எனக்கு தெரிந்து யாரும் இல்லை என்றேன் ''அவரில் முடிவில் நான் தொடர்வேன்...''புதிர் போட்டு போனாய் ...மண்டை குழம்பி இறுதியாய் என் பெயர் ஆங்கிலத்தி எழுதி புள்ளி வைக்கிறேன் அழகாய் தொடங்குகிறது உன் பெயர் ... காதல் தவிப்பும் சுகம் தான். இறுதியாய் உறுதியானேன் நீ என்னவள் என்று.... அன்று முதல் காதலோடு....
நீ,நான் மற்றும் நமக்கான வானம்....

2 comments:

நிலாமதி said...

" உங்களுக்கும் அவரை நன்றாக தெரியும் "ஏமாற்றி விடுவீர்களோ? என நினைத்தேன்.....அப்பாடா ...ஏமாற்ற வில்லை. அது நீங்களே தான். அழகான் காதல் தொடங்கிய கதை முடிவில் சுபம் ஆக பாராட்டுக்கள. வாழ்த்துக்கள.

சீமான்கனி said...

நிலாமதி said...
//" உங்களுக்கும் அவரை நன்றாக தெரியும் "ஏமாற்றி விடுவீர்களோ? என நினைத்தேன்.....அப்பாடா ...ஏமாற்ற வில்லை. அது நீங்களே தான். அழகான் காதல் தொடங்கிய கதை முடிவில் சுபம் ஆக பாராட்டுக்கள. வாழ்த்துக்கள.//


முதலில் தொடர்ந்து படித்ததிற்கு நன்றி அக்கா....
முதலில் வந்து உற்சாகம் தருவதற்கும் நன்றி.....

Related Posts with Thumbnails