Wednesday, August 26, 2009

நீ,நான் மற்றும் நமக்கான வானம்...(4)


(மீண்டு ஒரு விடுமுறை நாளில் ...ஊர் வருகிறேன்..)
அதிஷ்டம் என் இதயம் தடவிய நாட்கள் ....
என் தேவதை பிறந்தநாள் ...உனக்கு பரிசு தேடி அலைந்து இறுதியாய் ஒரு கரடி பொம்மை.அதன் மேல் அழுத்தினால் அது கத்தும்....ஐ லவ் யு என்று... பொதுவாக பிறந்தநாள் எல்லாம் கொண்டாடுவதில்லை இருவருமே.... பரிசோடு சரி.ஆனால்  இதை நீ எப்படி எதிர்கொள்வாய்??? விழி பிதுங்க நம் நந்தவனம்..(உன் வீட்டு மொட்டை மாடி)

வழக்கம் போல் வருகிறாய் கையில் தேநீருக்கு பதிலாய் பால் பாயாசம். நான் பாயாசம் பார்க்கிறேன் நீயோ பார்சலை பிரிக்கிறாய் ... அழுத்துஎன்ற இடத்தில் அழுத்திவிட்டு அலறுகிறாய்
பொம்மையின் வாய் அடைகிறாய்...அறை நிமிடம் ஐ லவ் யு... ஐ லவ் யு என்று அலறி விட்டு அமைதியாகிறது. பொம்மையோடு வேகமாய்...மறைகிறாய்.அவ்வளவுதான் என் உலகின் வீசுகின்ற காற்று ,பேசுகின்ற நிலா ஓய்ந்து போனது....

அடுத்த நாள் எனக்கு காச்சலே வந்து விட்டது .எனக்கு தெரியாமல் தைலம் தடவி தலைமாட்டில் ஒரு கடிதமும் வைத்து போகிறாய்....கடிதம் படித்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.....(தொடரும்)

No comments:

Related Posts with Thumbnails