Friday, August 28, 2009

நிச்சயக்கப்பட்ட சொர்க்கம்...


முகில்களால் மூடிய வானம்,...
திகில்களால் மூடிய பூமி.,
வாடை காற்று ஒருவித சிலிர்ப்பை,
சீண்டி விட்டு போக பனி விளக்கி -பால்
முகம் காட்டி எங்கோ இழுத்து போகிறாய்.
உன்னை போலவே கோடிகணக்கான தேவதைகள்,
சிவப்பு கம்பள வரவேற்ப்புவேறு.,
சொர்க்கத்து உணர்வு தொற்றிக்கொள்ள,
சொர்க்கத்து சுவரெல்லாம் உன் பிம்பம்.
திருமணம்தான் சொர்கத்தில் நிச்சயமாகும்.
காதல் நமக்காக -ஒரு
சொர்கத்தையே நிச்சயத்து
வைத்திருக்கிறது பார்த்தாயா......
நீ ,
மிதந்து தான் போகிறாய்,
இருந்தாலும் சிரிக்கிறது உன் கொலுசு.,
புகைக்குள் ஒழிந்த -பட்டாம்பூச்சியாய்
கண்ணாம்பூச்சி காட்டுகிறாய்.
உன் சிறகை எனக்கு பரிசளித்து விட்டு .,
சத்தம் இல்லாமல்
சேர்த்துவைத்த ,
சமத்து முத்தமெல்லாம்
சரவெடி சத்தமாய்
சகட்டு மேனிக்கு,
மேனியெல்லாம் நானைக்கிறாய்.,
கையில் ஏந்த சொல்லி
காதலும் -காமமுமாய்
கண்கட்டி வித்தை காட்டி
கனவுகள் எல்லாம்
கண்சிமிட்டி மறைய
அலறியது அலாரம்....

5 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

மனம் வருடும் இனிய கவிதை!

இங்கே பாருங்கள்: http://sumazla.blogspot.com/2009/08/blog-post_29.html

Jaleela Kamal said...

அருமையான கவிதை,

சீமான்கனி said...

//SUMAZLA/சுமஜ்லா said...
மனம் வருடும் இனிய கவிதை!//

உங்கள் உற்சாகதிர்ற்கும் தொடர் ஆதரவிர்ற்கும் நன்றி அக்கா.....
என்னையும் அழைத்தமைக்கு நன்றி...
ரெம்ப யோசிக்கனு போல சிக்கிரம்... போடுறேன் அக்கா....


Jaleela said...
அருமையான கவிதை,

நன்றி சகோதரி....வருகைக்கும் பதிவிர்ற்கும் இணைதிருங்கள்.....

க.பாலாசி said...

//கையில் ஏந்த சொல்லி
காதலும் -காமமுமாய்
கண்கட்டி வித்தை காட்டி
கனவுகள் எல்லாம்
கண்சிமிட்டி மறைய
அலறியது அலாரம்.... //

ஹா...ஹா....நல்லாருக்கு நண்பா இந்த வரிகள்... மிகவும் ரசித்து படித்தேன்....தொடருங்கள்...

சீமான்கனி said...

//ஹா...ஹா....நல்லாருக்கு நண்பா இந்த வரிகள்... மிகவும் ரசித்து படித்தேன்....தொடருங்கள்...//
நன்றி பாலாஜி அண்ணே...
படித்து, ரசித்து, தொடர்ந்து இனைதிருப்பதிர்ற்கு ....

Related Posts with Thumbnails