Monday, August 17, 2009

சொல்லடி என் ஸ்நேகிதியே!!!


சொல்லடி என் ஸ்நேகிதியே!!!

`பல முறை...`

என் கண்களை பார்த்து

நேர் முகங்கண்டு என்னிடம் பேசிட

துணிவில்லாமல் தன் செய்கையினாலும்

அசைவினாலும் என்னோடு

உரையாடியவர்களை மட்டுமே

நான் இது வரைக் கண்டிருக்கிறேன்!!!

`முதல் முறை... `

என் கண் பார்வையையும்

அதின் சபதங்களையும் எதிர்த்து

முறைத்து பேசிடும் அளவுக்கு உன்னையும்

ஆண்டவன் படைத்திருக்கிறான் என்று உன்னை

பார்த்து போதே நான் புறிந்து கொண்டேன்!!!

`பல முறை...

`என்னிடம்

பழகிடவருவோர்கள் எல்லாம் தயங்கி

தயங்கி ஒரு பிழையின்றி பேசிட யோசித்து

யோசித்து கவனமாய் என்னோடு பேசியோர்களை

மட்டுமே நான் இது வரைக் கண்டிருக்கிறேன்!!!

`முதல் முறை ...`

என் பேச்சுத்

திறனையும்சொற்களையும் திக்கித் தடுமாறிநாவு

தடம் புரல செய்திடும் அளவுக்கு உன்

ஒரு சொல் நயம் மிக்க சொல் கண்டு நான்

சற்றே சட்டென்று வியந்தும் போனேன்!!!

`பல முறை...`

என்னிடம் பேசியோர்களை கண்டு

நான் எகத்தாளமாய் பேசி சிரித்து

பரிதாபப் படுத்தியது உண்டு!!!!

`முதல் முறை...`

என் சிரிப்பையும் கூட

சிந்திக்கச் செய்து சிரிக்க வைத்தாயடி!!!

உன்னை நான் என்னவென்று

சொல்லி கவிதை

கிறுக்குவேன் சொல்லடி என் ஸ்நேகிதியே!!!`

-கவியழகன்!

4 comments:

sakthi said...

உறையாடியவர்களை

உரையாடியவர்களை எழுத்துப்பிழை மாற்றவும்

அழகான கவிதை

சீமான்கனி said...

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி சக்தி...

நிலாமதி said...

ஓ என் இனிய காதலியே .......ஏன் என்னை மாற்றினாய்

Toledo Custom Closets said...

Thanks, great blog post

Related Posts with Thumbnails